Headlines

சுமித்தின் சடலம் தோண்டுவது பிற்போடப்பட்டுள்ளது

பிரேத பரிசோதனைக்காக இன்று (10) தோண்டப்படுவதாக அறிவித்த எம்பிலிப்பிட்டிய சுமித் பிரசன்னவின் சடலம் தோண்டும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் குறித்த சடலத்தை தோண்டுமாறு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சடலத்தை பரிசோதனை செய்யும் சட்டமருத்துவர் தன்னால் இன்று வரமுடியாது என்று அறிவித்தமையினால் இந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி தொடர்ந்தும் விளக்கமறியலில்

எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன மார்ச் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி விளக்கமறியலில்

எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

எம்பிலிப்பிட்டிய விவகாரம்: ஏ.எஸ்.பி கைது

எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர்.   இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு ஆறு நாட்களுக்கு பின்னரே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More