Headlines

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு பிணை

எம்பிலிபிட்டியவில் சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற குடும்பஸ்தரின் மரணத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தர்மரத்ன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும்  அவரை விடுவிக்குமாறும் எம்பிலிபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி குமாரி எம்.அபேரத்ன உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த பொலிஸ் அத்தியட்சகரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணித்துள்ளார்.

Read More

எம்பிலிபிட்டிய இளைஞன் கொலை வழக்கு இன்று இடம் பெற்றது

எம்பிலிபிட்டிய இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சத்தியக்கடதாசி வாக்குமூலம் அல்லது நெருங்கிய உறவினரின் சாட்சியின் மூலமாக முன்வைக்குமாறு எம்பிலிபிட்டிய நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (3) எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது சத்தியக்கடதாசி வாக்குமூலம் முன்வைக்கப்படும் வரை இந்த வழக்கை பிற்போடுவதாக நீதிபதி பிரசன்ன பெர்ணான்டோ உத்தரவிட்டார்.

Read More

எம்பிலிபிட்டிய இளைஞனின் மரண அறிக்கை வெளியீடு

எம்பிலிபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் மருத்துவ உத்தியோகத்தர் டி.பி.குணதிலகவால் தயாரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையை எம்பிலிபிட்டிய மேலதிக் நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வெட்டு காயத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெயியேறியதால் மரணம் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது.

Read More

எம்பிலிபிட்டிய குடும்பஸ்தர் கொலை வழக்கு: நாளை தீர்ப்பு

எம்பிலிப்பிட்டியவில், 29 வயதான குடும்பஸ்தரொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று புதன்கிழமையுடன் (17) முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு, நாளை வெள்ளிக்கிழமை (19) வழங்கப்படும் என எம்பிலிப்பிட்டிய நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, நேற்று அறிவித்தார். அத்துடன், இப்படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமில் தர்மரத்னவை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது,…

Read More