Headlines

உயர் நீதிமன்றில் பிரசன்னமானார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார். யோஷித ராஜபக்சவின் பிணை மனுக் கோரிக்கை தொடர்பான மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் நோக்கிலே அவர் இவ்வாறு நீதிமன்றில்  பிரசன்னமாகியுள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித உள்ளிட்ட ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பு!

சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக எந்தவொரு அடிப்படையிலும் அரச தலைவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக கடமையாற்றிய…

Read More