வடகொரியா பிரஜைகளை விடுவிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை விடுவிக்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள வடகொரிய தூதரகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. 150,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த போது வடகொரியப் பிரஜைகளை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்த வடகொரியர்கள் ஓமானிலிருந்து சீனா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்…
