Headlines

ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணம்

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணமாகவுள்ளார். இவ்விஜயத்தின் போது ஆஸ்த்திரியா ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட முன்னணி அரச பிரதிநிதிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார். சிறந்த சமூக, சந்தைப் பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜேர்மன் அதிபர் விரைவில் இலங்கைக்கு விஜயம்

ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கல் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வை அழைப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மன் அதிபருடனான சந்திப்பின்போது விடுத்துள்ளார். அதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை மற்றும் ஐரோப்பா சந்தைக்கான இலங்கைக்கான மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார்.

Read More

ஜேர்மனிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

யுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக் கூடிய ஜனநாயக நாடாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மெர்கலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்த போதே, அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அவிவிருத்திக்கான உதவிகள் தொடர்பில் தனது நன்றிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read More

ஜனாதிபதி பேர்லினை சென்றடைந்தார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் நேற்று (15) அதிகாலை பேர்லினில் அமைந்திருக்கும் டெகல் விமான நிலையத்தை வந்தடைந்தனர். 01 – 02 ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் திரு. ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ் அவர்கள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்கின்றார். 03 – 06 ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில்…

Read More

ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று (15) ஜேர்மனுக்கு செல்லவுள்ளார். ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ்…

Read More

42 வரு­டங்­க­ளுக்கு பின்பு அழைப்பு விடுத்­துள்ள ஜேர்மன் அரசு

ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இலங்கை தலை­வ­ரொ­ரு­வ­ருக்கு சுமார் 42 வரு­டங்­க­ளுக்கு பிறகு அழைப்பு கிடைக்­க­பெற்­றுள்­ளது. இதன்­படி அந்த நாட்டு அர­சாங்­கத்தின் அழைப்­பினை ஏற்று அடுத்த மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜேர்­ம­னுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார். இலங்கை அர­சாங்­கத்தின் சீரான வெளி­நாட்டுக் கொள்­கையின் கார­ண­மாக ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இந்த அழைப்பு கிடைக்­க­ப்பெற்­றுள்­ளது. ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்­றத்­திற்கு பின்னர் அபி­வி­ருத்தி அடைந்து வரும் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு அழைப்­புகள் கிடைக்­க­ப்பெற்ற வண்­ண­முள்­ளமை விசேட அம்­ச­மாகும்….

Read More