Headlines

சந்திரிக்கா – புகுடா சந்திப்பு!

இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர், யசுஒ புகுடா(Yasuo Fukuda), நேற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து உரையாடினார் இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து தீர்க்கமாக ஆராயப்பட்டன. இலங்கை அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து சந்திரிகா குமாரதுங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு விளக்கங்களை வழங்கினார். இந்தநிலையில் ஜப்பானின் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகளுக்காக தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு சந்திரிக்காவுக்கு ஜப்பானின் முன்னாள் பிரதமர் அழைப்பு விடுத்தார். ஜப்பானின்…

Read More

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் கடற்படை கப்பல்கள்

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளன. குறித்த கப்பல்கள், இரண்டு  நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவின்  அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜே.எம்.எஸ்.டி.எப்.இனசுமா மற்றும்  சுசுட்சுக்கி போன்ற கப்பல்களே இவ்வாறு இலங்கை வந்துள்ளது. இதேவேளை குறித்த கப்பல்களில் வந்துள்ள ஜப்பான் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

Read More

ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சி

ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சியானது 12ஆவது தடவையாகவும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த கண்காட்சியானது செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக ஜப்பானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே இதன்நோக்கம் என இலங்கை வர்த்தக சங்கம் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியன இணைந்து தெரிவித்துள்ளன. மேலும், இந்த கண்காட்சி தொடர்பான மேலதிக தகவல்களை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தொலைபேசி…

Read More

கடல் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டிற்காக ஜப்பான் நிதியுதவி!

இலங்கையின் கடல் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டிற்காக 2.4 பில்லியன் ரூபா நிதியுதவியை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. கடல் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் திட்டத்திற்காக இலங்கை கரையோரப் பாதுகாப்புப் பிரிவிற்கு உதவும் வகையில் ஜப்பான் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் ரோந்து சேவைகளை விஸ்தரிப்பதற்காக கரையோரப் பாதுகாப்புப் பிரிவிற்கு இரண்டு படகுகளை கொள்வனவு செய்வதற்கும், கடற்கொள்ளை எதிர்ப்பு செயற்பாடுகள், நாடு கடந்த குற்றங்களைத் தடுத்தல், கடல் சூழல் மற்றும் வளங்கள்…

Read More

இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவை, வழங்குகிறது ஜப்பான்

இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட அபிவிருத்திக் கடன் உதவி உள்ளிட்ட மேலும் பல பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வேளை அவர் இதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட அழைப்பிற்கிணங்க G7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அந்நாட்டு பிரதமரை இன்று சந்தித்தார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கு, 38 பில்லியன்…

Read More

ஜப்பான் பயணமாகிறார் ஜனாதிபதி

ஜப்பானில் இடம்பெறும் ‘ஜீ 7’ நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) ஜப்பான் பயணமாகிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் ஜப்பான் இசெசிமாவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானியப் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹிரோட்டோ இசுமிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி உலகத்…

Read More

ஜீ –7 இல் கலந்து கொள்ள ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 25 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜப்­பா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­கிறார். ஜப்­பானில் இடம்­பெறும் ஜீ –7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி ஜப்பான் செல்­கிறார். இதன்­போது அம்­மா­நாட்டில் ஜீ–7 அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்­களைச் சந்­தித்து ஜனா­திபதி பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இம்­மா­நாடு 26 மற்றும் 27 இரண்டு தினங்கள் ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்­ளது. இதே­வேளை, ஜப்­பா­னியப் பிர­தமர் ஷின்சோ அபேயின் விசேட பிர­தி­நிதி இலங்கை வந்­த­தோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்துப்…

Read More

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு!

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, “உரக” மற்றும் “தக்சிமயேயமா” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (11) வந்தடைந்துள்ளன. இதன் போது கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் அவற்றை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நல்லெண்ணம் மற்றும் நட்பின் வெளிப்பாடாக நட்புரீதியான தயூளக்கட்டுப் பந்தாட்டப் (பேஸ் போல்) போட்டியில் இலங்கை கடற்படையின் பேஸ்பால் அணியுடன் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் அவர்கள் எதிர்வரும் பதினான்காம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து…

Read More

ஜப்பான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி அனுதாபம்!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானிய பேரரசர் ஆக்கிஹிட்டோவிற்கு (Emperor Akihito) அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானிய மக்கள் நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பேரிடர்களை கடந்து முன்னேற வேண்டும் எனவும், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அரசு என்ற ரீதியில் தாமும் இலங்கை மக்களும் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிலநடுக்கத்தினால் ஜப்பானிலுள்ள இலங்கை…

Read More

நட்பு ரீதியான கப்பலுக்கு அமோக வரவேற்பு

ஜப்பான் நட்பு ரீதியான கப்பல் நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 243 பேர் இந்த கப்பலில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல் 28ஆவது தடவையாக கடந்த மாதம் 28ஆம் திகதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. இதன்படி, இந்த கப்பலில் வருகைத் தந்திருந்த இளைஞர் யுவதிகளை நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கப்பலுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடல்களை…

Read More