Headlines

இலங்கை – சீனா உறவு பலப்படுத்தப்படும் – ஜனாதிபதி

இலங்கை மற்றும் சீனாவுடனான நட்பை நாளுக்கு நாள் பலப்படுத்தி முன்னோக்கிசெல்வதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். 67வது சீன தேசிய தினம் மற்றும் சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் 35வதுஆண்டுநிறைவு விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத்தெரிவித்துள்ளார். மேலும் அபிவிருத்தி, முதலீட்டுத்துறை மற்றும் சர்வதேச மட்டத்திலும் சீனாமற்றும் இலங்கையின் உறவு உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். சீன அரசானது இலங்கையுடன் எப்போதும் நல்லுறவைப் பேணி வரும் அரசு என்றும்ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கல்வித்துறை, வீதி…

Read More

பிரதமர் நாடு திரும்பினார்!

சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். நேற்றிரவு 11.15 மணியளவில் பிரதமர் நாட்டை வந்தடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி பிரதமர் தலைமையிலான குழுவினர் சீனா நோக்கி பயணித்தனர். அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சரித்த ரத்வத்த ஆகியோர் பிரதமரின் சீன விஜயத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையும் சீனாவும் கூட்டுக்குழுவை அமைக்க இணக்கம்

இலங்கை அரசாங்கமும் சீன அரசாங்கமும் கூட்டு குழு ஒன்றை அமைக்க இணங்கியுள்ளன. இந்த கூட்டு குழு தொடர்பான பிரதமரும், சீனத்தூதுவரும் அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய பின்னர் குறித்த இணக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதில் குறித்த பிரதேசத்தில் கைத்தொழில் துறைக்கான நிலத்தை ஒதுக்குவது தொடர்பான பேச்சுகளும் இடம்பெற்றதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கைக்கு நிதியுதவி முன்னணியில் சீனா!

இலங்கைவுக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லியன் டொலரை வழங்குவதாக வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக, இலங்கை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும் – சீனத் தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிஷாத் தெரிவிப்பு

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே விரைவில் கைச்சாத்தாகவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார வர்த்தக உறவுகள், மேலும் மேம்படுமென அமைச்சர் றிசாத் தெரிவித்தார். சீனாவின் கனியவள நிறுவனத்தின் பிரதிநிதிகள், அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் இன்று (12/05/2016) சந்தித்து, இலங்கையின் கனியவளத் துறையில் சீன நிறுவனங்களின் முதலீடு தொடர்பாக பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சீனப் பிரதிநிதிகள், இந்தத் துறையில் தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும், இலங்கையின் பூகோள நிலைமை கனிய…

Read More

மயானமாக இருந்த மத்தள விமானநிலையம் இயங்கப்போகின்றது

சீனாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயமானது  வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான  நோக்கமாக  அமைந்திருந்தது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் மயானத்திற்குள் தள்ளிவிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையத்தை இயங்கச் செய்வதற்கும் இவ்விஜயம் உந்து சக்தியாக அமைந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெலிஓயாவில்  நடைபெற்ற “இசுறுபுர” கிராம வீடமைப்பு திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும்   நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ…

Read More

சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார். இந்த உயர்மட்ட குழு 03 பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என பிரதமர் இதன் போது சீன ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்…

Read More

சீனாவுடன் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று (7) ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறுநீரக நோய் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் பாகத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஆகியன உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

சீனாவை சென்றடைந்தார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன வெளிவிவகார துணை அமைச்சர் கொங் சூவான் யூ மற்றும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரை பெய்ஜிங் கெப்பிட்டல் சர்வதேச விமான…

Read More

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாரம் மேற்­கொள்­ள­வுள்ள சீன விஜ­யத்தின் போது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்ளார். அது­மட்­டு­மன்றி பல்­வேறு உடன்­ப­டிக்­கை­களும் இந்த விஜ­யத்தின் போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. முத­லீ­டு­களை ஊக்­கு­வித்தல், பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப கூட்­டு­றவு சிறு­நீ­ரக நட­மாடும் சேவை, விளை­யாட்டு கூட்­டு­றவு சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­வித்தல், தெற்கு அதி­வேக பாதைக்­கான இரண்டாம் கட்ட அபி­வி­ருத்தி கம்­பஹா அத்­த­ன­கல்ல, மினு­வங்­கொடப் பகு­தி­க­ளுக்­கான நீர்­வ­ழங்கல் கடன் உடன்­ப­டிக்கை போன்­றன கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எதிர்­வரும் புதன்­கி­ழமை…

Read More

அத்ததஸ்ஸி தேரரின் மறைவுக்கு சீனத்தூதரகம் அனுதாபம்

அஸ்கிரியபீட மகாநாயக்க கலகம அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. அன்னாரது இறுதிக் கிரியைகளை எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் 02.30க்கு கண்டியிலுள்ள பொலிஸ் விளையாட்டரங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலகம அத்ததஸ்ஸி தேரர் காலமாகியதை அடுத்து கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது. சீனா – ஸ்ரீலங்காவிற்கு இடையில் பௌத்த தர்மத்திற்கு கலகம  அத்ததஸ்ஸி தேரரின் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று…

Read More