Headlines

ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணை

ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணையை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஈரானிய அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலியம் மற்றும் பெற்றொலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஈாரானுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை நீக்கப்பட்டதனால் ஈரானில் இருந்து மசகு எண்ணை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஈரான் – இலங்கை பேச்சுவார்த்தை வெற்றி

ஈரானுடன் மீண்டும் வர்த்தகத் தொடர்பை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, விரைவில் மிகவும் குறைந்த செலவில் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஈரானின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நேற்று மாலை ரவி கருணாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

Read More