Headlines

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்

இலங்கையின் ஜனநாயக   மற்றும் பொருளாதார  மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்தார். அமெரிக்க யுஎஸ்எய்ட்  நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில்  நேற்று (26) ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும்  தேசிய மாநாட்டில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப்  இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச தனியார் ஒத்துழைப்பு மாதிரியை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மக்களிற்கும்…

Read More

இலங்கைக்கு ஒபாமா புகழாரம்

தற்போது இலங்கையில் இடம் பெற்று வருகின்ற மாற்றங்கள் உலகத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்த ஒபாமா இதனை கூறியுள்ளார். மாறிவரும் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஒபாமா இதன் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கனடாவின் பிரதமர் Justin Trudo,அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull மற்றும் பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sherif ஆகியோரை ஜனாதிபதி…

Read More

அமெரிக்க விசேட கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் ஈரூ­டக போக்­கு­வ­ரத்துக் கப்­ப­லான யு.எஸ்.எஸ். நியூ ஒர்­லியன்ஸ் இன்று இலங்கை வர­வுள்­ளது. இலங்கைக் கடற்­ப­டை­யு­ட­னான இரு­த­ரப்பு உற­வு­களை அதி­க­ரிக்­கவும், அமெ­ரிக்­காவின் ஆத­ரவு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் அனர்த்த மீட்பு பயிற்­சி­களை அளிப்­ப­தற்­கா­க­வுமே அமெ­ரிக்க கடற்­படைக் கப்பல் கொழும்புத் துறை­முகம் வர­வுள்­ளது. இது­தொ­டர்­பாக இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், “21ஆம் நூற்­றாண்டு, பல்­வேறு வழி­க­ளிலும் இந்­தோ -­ப­சுபிக் நூற்­றாண்­டாக இருப்­ப­தா­க வும், தமது மூலோ­பாய அமை­வி­டத்தின் மூலம் இலங்கை நல்ல நிலையில்…

Read More

இலங்கை மீதான ஆயுத ஏற்றுமதி தடை நீக்கம்!

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆயுத ஏற்றுமதித்தடை தளர்த்தப்பட்டுள்ளமையைஅமெரிக்காவின் வாணிப கழகம் வரவேற்றுள்ளது. இந்த தடை 2008ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்தது.இதன்படி இலங்கைக்கு ஆயுதங்களை மற்றும் பாதுகாப்பு சேவைகளை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. எனினும் இது 2012ம் ஆண்டு கடல் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் என்பவைதொடர்பில் திருத்தியமைக்கப்பட்டது. இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் காலத்தில் இது தளர்த்தப்பட்டுள்ளமையானது இரண்டுநாடுகளின் உறவில் ஆரோக்கியமான விடயம் என்று அமெரிக்காவின் வாணிப கழகம்குறிப்பிட்டுள்ளது.

Read More

இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒபாமா

இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தொடர்ச்சியான வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும்…

Read More

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரத்து

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடக பிரிவு தெரி­வித்­துள்­ளது. சூழல் பாது­காப்பு தொடர்பில் இடம்­பெ­ற­வுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்­வ­மான விஜயம் மேற்­கொண்டு 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு பய­­ண­மா­க­வி­ருந்தார். இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியின் செல­வீ­னங்­களை குறைப்­ப­தற்­காக சர்­வ­தேச நாடு­க­ளுக்­கான விஜ­யங்­களை குறைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி ஏற்­க­னவே அறி­வித்­திருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது. எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்க விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி…

Read More

அமெரிக்காவின் மேலும் பல போர்க்கப்பல்கள் இலங்கை வரும்!

அமெரிக்க கடற்படையின் மேலும் பல கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்தார். அமெரிக்க -இலங்கை படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போதே, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.இதன்…

Read More

ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்

– லியோ நிரோஷ தர்ஷன் – ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன நான்கு நாள் உத்தியோகப்பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்கவிற்கு செல்லவுள்ளளார். பன்னாடுகளின் தலைவர்களின் பங்குப்பற்றலுடன் சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

Read More

இலங்கையின் வாக்காளர்களுக்கு அமெரிக்கா மதிப்பளிக்கிறது!

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியும் ஆகஸ்ட் 17ஆம் திகதியும் இலங்கை மக்கள் அளித்த வாக்குகளுக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமரிக்க தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சிறப்பான எதிர்காலம், ஜனநாயகம் என்பன இந்து- பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வந்துள்ள அமெரிக்கா கடற்படை கப்பலை வரவேற்கும் நிகழ்வின்போது கெசாப் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் பல முக்கிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது இலங்கை…

Read More

அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் ப்ளு ரிட்ஜ் (USS Blue Ridge) நல்லெண்ண அடிப்படையில் நேற்று முந்தினம் (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இதேவேளை, இக்கப்பலின் சிரேஷ்ட அதிகாரி, அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் அவுகொயின்  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கடற்படைக் கட்டளை தலைமையகத்தில் வைத்து…

Read More

31 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு ஒதுக்கும் அமெரிக்கா

இலங்கை அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க மற் றும் ஊழல் ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்காக 31 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஒது க்கும் யோச­னையை அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் நிர்­வாகம் முன்­வைத்­துள்­ளது. அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லா­ளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்­கி­ரஸுக்கு அனுப்­பி­வைத்­துள்ள வர­வு­ – செ­லவுத்­திட்ட யோச­னை­யி­லேயே இது குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தித் ­தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­த­லின் பின்னர் இடம்­பெற்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த மாற்­றங்­க­ளுக்கு பின்னர் இலங்­கைக்­கான அமெ­ரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்­துள்­ள­தாக அந்த…

Read More