Headlines

குழந்தையை பலியெடுத்த எறும்பு

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை மூச்சுத்திணறலால் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (2) அதிகாலை வேளையில் அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த தாதிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார். எறும்புகளை தாதியர்கள் துடைத்தபோது குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த குளுக்கோஸ் போத்தல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின்…

Read More

புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு

ஐரோப்பா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து, ஒரே பொருளாதார வலயத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் புதிய பொருளாதார வலயம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது. புதிய பொருளாதார வலயம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், உலகத்தில் இரண்டாவது பாரிய சந்தைக்குள் இலங்கைக்கு நுழைய முடியுமென அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம…

Read More

ரணில் தலைமையில் உயர்மட்ட குழு மே மாதம் இந்தியா பயணம்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லும் அரசாங்கத்தின் உயர் மட்ட குழுவில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இடம்பெறுகின்றார். துறைமுக நகர் விவகாரம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னரான சூழ்நிலை என்பவை இந்த விஜயத்தில் முக்கிய விடயங்களாக இந்தியா கவனத்தில் கொள்ளவுள்ளது. கடன்களுக்காக பங்குகளை விற்பணை செய்வதற்கான…

Read More

இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி

இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் மார்ச் 11…

Read More

நாளை வரு­கிறது இந்­திய நிபுணர்குழு

இலங்கை – இந்­திய பொரு­ளா­தார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்­பந்தம் தொடர் பில் இரு நாட்டு அதி­கா­ரிகள் மட்டப் பேச்சு வார்த்­தை­க­ளுக்­காக இந்­திய உயர் மட்ட குழு நாளை வியா­ழக்­கி­ழமை இலங்கை வரு­கின்­றது. இரு நாட்டு அதி­கா­ரி­களின் பங்­குப்­பற்­ற­லுடன் வெள்­ளிக்­கிழமை கொழும்பில் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இலங்கை, – இந்­திய கூட்டு ஒப்­பந்தம் தொடர்­பான செய­ல­மர்வு இடம்­பெ­ற­வுள்­ளது. இலங்கை, – இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவின் ஊடாக கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தாரம் மற்றும் தொழில் நுட்­பத்தை மையப்­ப­டுத்­திய கூட்டு ஒப்­பந்­தத்­திற்கு இணக்கம்…

Read More

இந்தியாவுக்கு  சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்

சர்வதேச பொதுமன்னிப்பு சபை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சர்வதேச விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு(2015-16) அந்த சபை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா குறித்து கூறி இருப்பதாவது:- பல்வேறு துறை கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் தங்களுக்கு அளித்த தேசிய விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்து இருக்கின்றனர். இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதை இதற்கு காரணமாக இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர் சமூக தொண்டு நிறுவனங்கள் மீதான கொள்கைகளையும்,…

Read More

இந்தியாவுக்கு பயணமானார் ரணில்

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க இன்று (12) காலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் இன்று மதியம் நாடு திரும்பக் கூடுமென்று எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More

மஸ்ஜித் இமாம் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்

இந்தியா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாம் டூரு பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. தலையில் தாக்கப்பட்டு பலியான இமாம் அப்துல் ஹமித் மாலிக்(வயது 45) மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில்…

Read More

இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் 05 ஆம் திகதி (நாளை மறு தினம்) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வில் பங்குகொள்ளும் பொருட்டே எதிர்வரும் 05 ஆம் திகதி வருகைதரவுள்ள இவர் 06 ஆம் திகதி வரையான இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார். இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள…

Read More

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

இந்­திய கர்­நா­டக மாநி­லத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் திரு­ம­ணத்தில் ரசம் இல்­லா­ததால் தனது திரு­ம­ணத்தை நிறுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. கர்­நா­டக மாநிலம் தும்கூர் மாவட்­டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகு­தியைச் சேர்ந்த பிர­காசம் – சௌபாக்­கி­யம்மா தம்­பதிகளின் மகள் சௌமியா. இவ­ருக்கும் ஸ்ரீரா­ம­புரம் திம்­மை­யம்மா மகன் ராஜு­வுக்கு குனிக்கல் கிரா­மத்தில் நேற்­று­முன்­தினம் திரு­மணம் நடப்­ப­தாக முடி­வா­னது. திரு­ம­ணத்­துக்கு முதல் நாள் இரவு திரு­மண வர­வேற்பு விருந்து இடம்­பெற்­றுள்­ளது. மண­மகன் ராஜு தனது குடும்­பத்­தி­ன­ருடன் மிக தாம­த­மாக மண்­ட­பத்­துக்கு வந்­துள்­ள­தை­ய­டுத்து உடனே…

Read More

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், இந்தியா ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள் பலரும்…

Read More

தர்மங்கள் செய்வதில், முஸ்லிம்கள் முதலிடம்

‘அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, இந்திய நாடு முழுவதும் 350,000 பள்ளிக்கூடங்களை உருவாக்கி சேவையாற்றி வருவதுடன், தான்-தர்ம காரியங்களில் பணத்தை செலவழிப்பதில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாட்டிலேயே முதலிடத்தில் இருந்து வருகிறார், அசீம் ஹாஷிம் பிரேம்ஜி. 2,404 கோடிகளை (இந்திய மதிப்பில்) செலவழித்து, நந்தன் ரோகினி குடும்பம் இரண்டாம் இடத்திலும், 1,322 கோடிகளை வழங்கி நாராயண மூர்த்தி குடும்பத்தினர் 3-ம் இடத்திலும், 1,238 கோடிகளுடன் தினேஷ் குழுமம் 4-ம் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே…

Read More