தெஹிவளை பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்கு, பிக்குகள் கடும் எதிர்ப்பு – நிர்வாகிகளுக்கும் அச்சுறுத்தல்
தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு அப் பிரதேச பௌத்த பிக்குகள் சிலர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (23) இரவு இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகளை தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதற்கமைய நேற்றுக் காலை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் எதிர்ப்பு வெளியிட்ட பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவினருக்குமிடையில் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது ஆர்.ஆர்.ரி. நிறுவன சட்டத்தரணிகளும் பிரசன்னமாகியிருந்தனர்….
