முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளர் – மங்கள
வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதானிகளாக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் ஆட்சியாளர்களது முதன்மைக் குடும்பத்து உறவினர்கள் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். தூதுவராலயங்களுக்கு சொந்தமான கட்டடங்களை விற்பனை செய்து அந்தப் பணத்தை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி. யினால் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டு உடன்படிக்கைகளுடன் தொடர்புபட்ட பத்து நாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
