Headlines

அரநாயக்கவில் மீட்கப்பட்ட உடற்பாகங்களால் சிக்கல்

அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்னும் கேகாலை பெரிய வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உடற்பாகங்கள் வைத்தியசாலையில் பிரதே அறையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உடற்பாகங்கள் பிரேத அறையில் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி டொக்டர் ரமேஷ் அழகியவன்ன கூறுகின்றார். இதன்காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

அரநாயக்கவில் ஆர்ப்பாட்டம்

அரநாயக்க சுகாதார வைத்திய அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுவரும்அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அமைச்சர்களின் வாகனங்கள் திரும்பிச் செல்ல முடியாதவாறு சிலர் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

அரநாயக்க பகுதியில் 6 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தினால் மூடல்

கேகாலை – அரநாயக்க பகுதியிலுள்ள 6 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தினால் மூடப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 36 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன.

Read More

ஜப்பான் ராடாரில் அரநாயக்கவின் படங்கள்

அரநாயக்கவில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவை, ஜப்பானின் ராடார் செயற்கைக் கோள் புகைப்படமெடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி மண்சரிவு இடம்பெற்றவுள்ள மலைப்பகுதி எவ்வாறு காட்சியளித்தது என்றும் கடந்த 25ஆம் திகதி எந்தப்பகுதி மண்சரிவால் பாதிக்கப்பட்டது என்றும் அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

Read More

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) சபையில் தெரிவித்தார். அனர்த்தத்தால் மரணமானவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இச்சபையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை…

Read More

அரநாயக்க மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்கு திடீர் சுகவீனம்

அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்கு தீடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவப் படைவீரர்கள் மற்றும் அதிகாரிகளே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எல்.எம்.ஆர்.மார்க் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அரநாயக்கவின் தற்போதைய சுற்றுச் சூழல் மற்றும் சடலங்களிலிருந்து வெளியாகும் கிருமிகள் போன்றவற்றினால் இவ்வாறு நோய் வாய்ப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சை அளிக்கப்படும் எனவும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர்…

Read More

220 பேர் தொடர்பில், இதுவரை தகவல் இல்லை

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, அவர்களின் உறவினர்கள் மற்றும் துயர்பகிரச் செல்வோரும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாரிய அழிவுகளை ஏற்படுத்திய…

Read More

அரநாயக்க பாரிய மண்சரிவு! 134 பேர் புதையுண்டுள்ளதாக அச்சம்?

மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் புதையுண்ட 14 சடலங்கைள மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். எனினும் இன்னும் 134 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க, எலங்கபிட்டிய சாமசர மலை இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டது. மலையடிவார கிராமங்களில் காணப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மலையின் நூறு ஏக்கர் பகுதி சுமார்…

Read More

அரநாயக்கவில் ஐந்து சடலங்கள் மீட்பு

மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு (17) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது. இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில்…

Read More