Headlines

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட இடமளிக்கப் போவதில்லை

அரச ஊழியர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 2500 கிராம அலுவலர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்குவதற்காக நேற்று (07) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற வைபவத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதியும் அரச உத்தியோகத்தரும் தனது கடமை தொடர்பில் நேர்மையாக பணியாற்ற வேண்டுமென குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகாலம் கிராம…

Read More

அரச ஊழியர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவு

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் 20 வீதத்தை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 20 வீத கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது. கடந்த காலத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்த தொகையிலிருந்து 20 வீதத்தை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜீ.தடல்லகே தெரிவித்தார். இதன் பிராகாரம் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை…

Read More

பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம்

– ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம் –  அரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை இரத்து   செய்வதற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலோ எதுவிதமான  தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லையென இன்று  சபையில் உறுதியளித்த  பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க எதிர்காலத்தில்  அரச தனியார் துறையினருக்கு பொதுவான  ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட  உரையொன்றை ஆற்றும்- போதே பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

Read More