Headlines

 புதிய அரசியலமைப்புக்கு 5,000 யோசனைகள்

புதிய அரசியலமைப்பு தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளைப் பதிவு செய்யும் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.

Read More

வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கணிப்புக்கு அனுமதி

– எஸ்.ரவிசான் – தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள  புதிய அரசியலமைப்புக்கு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் கருத்துக்கள் உட்பட யோசனைகளை பெறுவதற்கு  பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்தது. வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை காணொளி அழைப்பு மூலமாக பெற்றுகொள்வதற்கு போதுமான வசதி எம்மிடம் காணப்படாத நிலையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

Read More