வடக்கிற்கு செல்லும் பரணகம ஆணைக்குழு
காணமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரையில் நான்கு நாள் அமர்வுகளை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. நான்கு தினங்களும் முற்பகல் 8.30முதல் மாலை 5.30 வரையில் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 27ஆம்திகதி வலிகாமம் கிழக்கு(கோப்பாய்) வடமராட்சி வடக்கு(பருத்தித்துறை) வடமராட்சி தென்மேற்கு(கரவெட்டி) ஆகிய பிரதேச சபைளுக்காக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலத்திலும் 28ஆம் திகதி தீவகம் தெற்கு(வேலணை), ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய…
