மஹிந்த அணியின் கோரிக்கை சபாநாயகர் கருவினால் நிராகரிப்பு
பாராளுமன்றத்தில் பொது எதிரணியாக சுயாதீன மாக செயற்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்த மஹிந்த அணியினரின் வேண்டுகோள் சபாநாயகரினால் நிராகரிக்கப்பட்டதையடுத்து மஹிந்த ஆதரவு அணி எம்.பிக்கள் சபை மத்தியில் வந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இக்கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் முன்வைத்த உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. 52 எம்.பிக்கள் கையெழுத்திட்டு இணைந்த பொது எதிரணியாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட போதும் அதற்கு…
