மார்ச் 13, துக்க தினமாக பிரகடனம்
அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள், எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அத்தினத்தை தேசிய துக்க தினமான, அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.
அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள், எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அத்தினத்தை தேசிய துக்க தினமான, அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.
காலமான அத்ததஸ்ஸி தேரரது இறுதி கிரியை 13 ஆம் திகதி கண்டி கவற்துறை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று (10) காலை ஒன்று கூடிய தேரர் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தம்மாநந்த தேரர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரரான ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகுமென்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரரின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலு கூறப்பட்டுள்ளதாவது; மறைந்த தேரர் இனங்களுக்குகிடையில் நல்லுறவை உருவாக்குவதில் பெரிதும் பாடுபட்டவர். பல்வேறு பட்ட கொள்கைகளையுடைய அரசியல்வாதிகள் இவரிடம் சென்று ஆசி பெறும்போது இன ஐக்கியத்தின் அவசியத்தை அவர்களிடம் அடிக்கடி வலியுறுத்துவதோடு நாட்டில் சமாதானம் நிலைக்க அனைவரும் பாடுபடவேண்டுமெனவும் அவர்களிடம் சுட்டிக்காட்டுவார். அதிகாரத்திலுள்ளவர்கள் தவறிழைக்கும் போதும்…