மரண அச்சுறுத்தல் குறித்து நான் அஞ்சப் போவதில்லை : சபாநாயகர்
– ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம் – எனது அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளேன். எனவே எனக்கெதிராக மரண அச்சுறுத்தல் தொடர்பில் நான் அஞ்சப் போவதில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் தெரிவித்தார். ஜே.வி.பி. தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுர திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றைக் கிளப்பினார். இதில் சபாநாயகருக்கு (உங்களுக்கு) தொலை பேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று நீங்கள் நேற்று புதன்கிழமை சபையில் வெளிப்படுத்திய…
