Headlines

ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனை கருத்தரங்கு

– எஸ்.அஸ்ரப்கான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் (08) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக போரத்தின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார். போரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொத்துவில் – அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக் குழுவின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகளும், புலனாய்வு அறிக்கை, ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் போரத்தின் சகல ஊடகவியலாளர்களும் கலந்து பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றனர். சரியாக…

Read More

கடலில் நீராடச் சென்ற மாணவனைக் காணவில்லை

– ரீ.கே.றஹ்மத்துல்லா – அம்பாறை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (17) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று, 13ஆம் பிரிவைச் சேர்ந்த அக்கரைப்பற்று அல்-பாத்திமியா வித்தியாலத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் ஹில்மி முஜீப் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இம்முறை க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதவிருந்த மேற்படி மாணவன், தற்போது பாடசாலை பிரதேச விளையாட்டுப் போட்டி நடைபெற்றுவருவதனால் அப்பயிற்சியை…

Read More

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பாறூக் வபாத்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60வயது வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாறூக் எனும் 60 வயதுடைய நபரே குறித்த விபத்தில் மரணித்துள்ளார். இவ் விபத்து நேற்று புதன் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையிலேயே…

Read More