Headlines

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் துரிதமடையும்: மோடி

இலங்கையின் அமைதி, நல்லிணக்க நடவடிக்கைகளை, அந்நாட்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு துரிதப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.  அப்போது, உலகம் முழுவதும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்காக இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா மற்றும் அந்நாட்டு பிரதமர் விக்கிரமசிங்கேவுக்கு அவர் பாராட்டுகளை…

Read More

2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி

பொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. ‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானது. இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில் சார்ஜ் ஏற்ற முடியும். 2 நிமிடத்தில் முழுவதும் சார்ஜ் ஆகும் இந்த பேட்டரி மூலம், 5 மணி…

Read More

சீர்குலைந்த சட்டத்தை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை – ரணில்

கடந்த 5 வருடங்களாக சீர்குலைந்திருந்த இலங்கையின் சட்டத்தை மீண்டும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆசிய நாடுகளின்;, சட்டமா அதிபர்களின் மாநாட்டை இன்று, ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.எமது நீதித்துறை 200 வருடங்களுக்கு மேல்ப்பட்டது. உயர் நீதிமன்ற முறைமை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து, எமது நீதித்துறை குறித்த நாம் பெருமைப்படலாம் ஆனால், துரதிஸ்ட வசமாக கடந்த 5 வருட காலப்பகுதியினுள் அதன் அடித்தளத்திற்கு சவால் மற்றும் முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக நீதித்துறை…

Read More

அ.இ.ம.காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக விடுக்கும் ஊடக அறிக்கை

அஸ்ரப் ஏ. சமத் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு வழங்கப்படல் வேண்டுமென்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. கிழக்கு மாகாணம் மூவின மக்களையும் சம அளவாக காணப்படும் ஒரு மாகாணமாகும். அந்த வகையில் கிழக்குக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக கொள்கையளவில், நிராகரிக்க முடியாது. ஆனால் இன்று நாடு இருக்கின்ற சூழ்நிலையில் குறிப்பாக கடந்த 2 வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் எழுப்பப்பட்ட இனவாத கோசம் மறுபுறத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரியின்…

Read More

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். நாளை தினம் தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டு பதவியேற்ற டிகிரி கொப்கேகடுவவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பருடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

100 நாள் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜங்க கல்வி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் டயகம கிழக்கு தோட்டத்தை கடந்து செல்லும் ஆற்றுக்கு மேலாக உள்ள பாலம் கடந்த காலங்களில் உடைந்திருந்தது. இந்நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க

முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­களை தற்­போ­தைய புதிய அர­சாங்கம் மூலம் வெளிப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்­கின்­றது. முன்­னைய ஆட்­சியில் முக்­கிய பிர­மு­கர்கள் பலரின் ஊழல்கள் தொடர்­பி­லான ஆதா­ரங்கள் எம்­மிடம் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க தெரிவித்தார் முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷவிற்கும் எதி­ரான பாரிய…

Read More

பிரதமர் ரணிலின் அதிரடி (முழு விபரம் இணைப்பு)

பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முன்வந்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத் திட்டத்தின் முக்கிய அங்கமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இத்திட்டம் அமுலாகும். கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் பதில்…

Read More

மஹிந்தவை பொதுத் தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சி : சம்பிக்க ரணவக்க

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் முன்­னி­லைப்­ப­டுத்தி வெற்றி பெறு­வ­தற்கு சிலர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்கப் போவ­தில்லை. அம் முயற்­சியை தகர்த்து தவி­டு­பொ­டி­யாக்­குவோம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார். பஷில், கோத்த­பாய என ராஜ­ப­க்ஷ­வினர் தொடர்­பாக மக்கள் மத்­தியில் காணப்­பட்ட வீரர்கள் என்ற மாயைக்கு மக்கள் தேர்­தலில் பாடம் புகட்டி அவர்­களை சிறிய மனி­தர்­க­ளாக்­கி­யுள்­ளனர் என்றும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக மின்­சக்தி மற்றும் எரி­சக்தி தொடர்­பான அமைச்சர் சம்­பிக…

Read More

தமிழக அரசுடனும் நட்புறவை வலுப்படுத்துவது அவசியம் : லக்ஷ்மன் கிரியெல்ல

இந்­தி­யா­வு­ட­னான நட்­பு­றவை கடந்த அர­சாங்கம் முறித்துக் கொண்ட நிலையில் புதிய அரசு நட்­பு­றவை புதுப்­பித்­துக்­கொள்ள எடுக்கும் நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கப்­ப­டு­வ­தற்­கு­ரி­ய­தாகும் எனத் தெரி­வித்த பெருந்­தோட்­டத்­துறை அபி­வி­ருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எமது எதிர்­கால பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தா­கு­மென்றும் தெரி­வித்தார். தமிழக அரசாங்கத்துடனும் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்­பாக அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில், அயல் நாடான இந்­தி­யா­வுடன் நெருங்­கிய நட்­பு­றவை பேணு­வது என்­பது எமது வெளி­நாட்டுக் கொள்­கையின் முக்­கி­யத்­து­வ­மா­ன­தாகும்.ஆனால் கடந்த…

Read More

இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் : ரவி கரு­ணா­நா­யக

எதிர்­வரும் 29ஆம் திகதி பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள் குறைக்­கப்­பட்டு நாட்டு மக்கள் வாழ்க்கை சுமை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு வழி திறந்து விடப்படும் என நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள புதிய அரசின் இடைக்­கால வரவு – செலவுத் திட்­டத்தின் மூலம் மக்­க­ளுக்­கான சலு­கைகள் வழங்­கப்­ப­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார். இது தொடர்­பாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக மேலும் தகவல் தரு­கையில்,எதிர்­வரும் 29 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் இடைக்­கால வரவு செலவுத் திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் எரி ­பொ­ருட்­களின்…

Read More

ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!: ஒபாமா

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் தற்போது நடைபெற்று வரும் ஈரானின் அணுச்செறிவூட்டலை மட்டுப் படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளைப் பாதித்து யுத்தத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனுடன் இணைந்து உரையாற்றும் போதே…

Read More