Headlines

“முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் சமூகத்தின் மீதும் தங்கள் பணிகளின் மீதும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்”- தவிசாளர் தாஹிர்!

அதிகமாக முச்சக்கர வண்டிகளை பயணத்திற்காக நமது பெண்களே பயன்படுத்துகின்றனர் அந்தவகையில் நமது பெண் பிள்ளைகளை பாடசாலைகளைக்கும் மாலை நேர வகுப்புக்களுக்கும் முச்சக்கர வண்டிகளில் உங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பெற்றோர்கள் அனுப்புகின்றனர், அந்தவகையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களாக தங்களின் பிள்ளைகள் போல பொறுப்புணர்வுடன் நடாத்துவது ஒவ்வொரு சாரதியின் மீதும் கட்டாயமாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். எம்.எம். தாஜூடீன் அவர்களின் தலைமையில் இன்று(7) நடைபெற்ற நிந்தவூர்…

Read More

உயிர்களை பறிகொடுத்த மலையக மக்கள் விடுக்கும் அவசர கோரிக்கை

பதுளை-மீறியபெத்தை இடம்பெற்ற மண்சரிவினைத் தொடர்ந்து தமக்கு பாதுகாப்பான சொந்த வீடு, சொந்த காணி வேண்டும் என்ற குரல் மலையகத்திலிருந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. அண்மையில் கொஸ்லாந்தை மீறியபெத்தை தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அனுதாபங்களை தெரிவித்து மலையகத்தின் பல்வேறு தோட்டப்பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம், அஞ்சலி கூட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறான அனர்த்தங்களுக்கு இனிமேல் இடமளிக்காமல் மலையக மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையக மக்களும் கோரிக்கை…

Read More

முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “சிறந்த மேடைப் பேச்சாளரும் சமூகப்பற்றுள்ளவருமான அப்துல் மஜீத், மக்களுடன் அன்பாகக் பழகக்கூடிய மனிதநேயம் கொண்டவர். இணைந்த வடகிழக்கு மாகாண சபையில், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அவர், மக்களின் தேவையறிந்து துணிச்சலுடன் கருமமாற்றியவர். கட்சி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் மதித்து, மக்கள் பணியாற்றியவர். அன்னாரின் மறைவினால் துயறுற்றிருக்கும் அவரது…

Read More

புலனாய்வு பொலிஸார் இருவர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரை திங்கட்கிழமை (25) இரவு கைதுசெய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள், 38 வயதுடைய குறித்த பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்றில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருகின்றது. பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்….

Read More

வரலாற்றில் உலகிற்கே இயற்கை றப்பர் வழங்குனராக இலங்கை !

கிருஷ்ணி இபாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது. ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும.; இன்று (28) காலை சினமன் கிராண்;ட் ஹோட்டலில் முதல் முறையாக இலங்கையில் நடைபெற்ற உலக…

Read More

’11 மாவட்டங்களில் ஐ.நா கூட்டு கணிப்பீடு’

‘அடிமட்டக் களத் தேவைகள் பற்றிய மேலும் தகவல் பெறுவதற்காக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,  இலங்கையிலுள்ள 11 மாவட்டங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து, விரைந்த கூட்டு கணிப்பீடுகளை ஒழுங்கு செய்திருக்கின்றன’ என ஐ.நா விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது  தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்ரீபன் துஜாரி, ‘கூட்டு மூலவள இணைப்பு முயற்சிகளில், உள்நாட்டு ஐ.நா ஒத்திசைவு மற்றும் உதவி நிறுவனங்களைப் பலப்படுத்த மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகமும் (OCHA) உதவிசெய்தது’ என்றார். …

Read More

ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். இது மிகவும் தீர்மானம் மிக்கதோர் சந்தர்ப்பமாகும், இந்த வேளையில் பொறுப்புணர்ச்சியின்றி செயற்பட முடியாது. இனங்களுக்கு இடையில் பல்வேறு வழிகளில் முரண்பாடுகளையும் பிரிவினையையும் இந்தளவுக்கு வேறு எந்தவொரு அரசாங்கமும் ஏற்படுத்தவில்லை. அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசாங்கமொன்று தேவைப்படுகின்றது. அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டுமென்ற கொள்கையை ஐக்கிய…

Read More

இஸ்ரேல் உளவுத்துறையை விட எங்களது உளவுத்துறை சக்தி வாய்ந்தது – ஹமாஸ்

Abusheik Muhammed 1.இஸ்ரேல் உளவுத்துறையை விட எங்களது உளவுத்துறை சக்தி வாய்ந்தது. 2.இதனால் தான் எங்களுக்குள்ளேயே இருந்து இஸ்ரேலுக்கு தகவல் வழங்குவோரை கைது செய்ய முடிந்தது . 3.நாம் எங்களது கோரிக்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். முற்றுகை நீக்கப்பட வேண்டும். 4. உணவையும் மருந்தையும் காஸாவுக்குள் கொண்டுவருவது எங்களது உரிமை. யூத குடியேற்றங்களும், முற்றுகையும் தான் இஸ்ரேலுடனான எங்களது போராட்டத்துக்குக் காரணம். 5.இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையில் எந்த பிரயோசனமும் இல்லை.எங்களது எதிரிகளை நாங்கள் அறிந்து கொண்டுவிட்டோம். 6.எங்களது போராட்டத்தின்…

Read More

ஊடகங்கள் மோசமாக செயற்படுகின்றன – விக்டர் ஐவன்

இலங்கையின் ஊடகங்கள் குறித்து திருப்தி அடைய முடியாது என ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகங்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களை தூய்மைப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். தாம் ராவய ஊடகத்தில் ஆசிரியராக கடமையாற்றிய போது உச்ச அளவில் ஊடக ஒழுக்க விதிகளை பின்பற்றி செய்தி…

Read More

மஹிந்தவுக்கு ஆதரவாக இன்று இரவை பாராளுமனரத்தில் கழிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்….

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தனது அதிகாரத்தை மீறி செயற்படுவதாக குற்றம் சாட்டியும் முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமனரத்தில் இன்று இரவை கழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை முன் எடுத்து வருகினறனர். குறித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் நாளை விடியும் வரை பாராளுமன்ரத்தில் வீற்றிருந்து தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக கொழும்பு தவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு…

Read More

தும்பு தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கொழும்பில் உயர்மட்டக் கூட்டம்!

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி, அக்கரைப்பற்று, விருதோடை, நல்லாந்தழுவ, புழுதிவதிவயல், கடையாமோட்டை, கனமூலை ஆகிய பிரதேசங்களில்…

Read More

ஜனாதிபதி தேர்தலில் விசித்திர சின்னங்கள்

கவிதா சுப்ரமணியம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், வெளியிட்டுள்ளது. நேற்று (10) வெளியிடப்பட்டுள்ள சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்கச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்ததுள்ளது. 17 அரசியல்; கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி,…

Read More