Headlines

இலங்கையில் மனித உரிமைகள் நிலை முன்னேறி விட்டது அமெரிக்கா

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் தனது ருவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இத்தகைய முகாமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும். இதன்போது வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதும் வானியல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதும் நோக்கமாகும். இந்த முகாம் இரவு 7.00…

Read More

மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வித்தியா வழக்கு!

புங்குடுதீவில் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோநாதன் வித்தியா மீதான படுகொலை வழக்கு தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம். றியால் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் இதுவரை பன்னிரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது,…

Read More

மதுபானசாலைக்கு எதிரே, பள்ளிவாசலுக்கு காணி வேண்டாம் – முஸ்லிம் அமைச்சர்களுக்கு கடிதம்

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்­கென்று நகர அபி­வி­ருத்தி சபை ஒதுக்­கி­யுள்ள காணியை தவிர்த்து அதற்­கப்­பா­லுள்ள முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை 1982 ஆம் ஆண்டு சுவீ­க­ரித்துக் கொண்ட காணியைப் பெற்றுத் தரு­மாறு தம்­புள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மி­டமும் அரச தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாஷி­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தம்­புள்ள பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள காணி­யி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்­காக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மது­பா­ன­சா­லைக்கு…

Read More

சிங்கள இனவாதிகளை திருப்திபடுத்த, மைத்திரி துடிக்கிறார் – சிராஸ் நூர்தீன்

பௌத்த வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்ற சுதந்திரக் கட்சி திட்டமிடுவதாக கூறிய பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். இதுபற்றி பேசிய சிராஸ் மேலும் கூறியதாவது, மஹிந்தவின் வழியில் மைத்திரி செல்கிறார். முன்னர் பண்டாhநாயக்காவும் இப்படிதான் செய்தார். அவர்கள் சகலரும் இறுதியில் மண் கவ்வினர். சிங்கள வாக்குகளை இலக்குவைப்பதற்காக இவர்கள் கைக்கொள்ளும் இந்த உபாயம் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும். சுதந்திரக் கட்சியை மீண்டும் பதவிக்கு கொண்டுவர மறைமுக காரியங்கள்…

Read More

பிரதம செயலாளர் யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை

வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி யாருடைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பட்டவர் அல்ல.என்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தினால்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதம செயலாளர்ஆளுநரை பின்பற்றுபவரா அல்லது முதலமைச்சரை பின்பற்றுபவரா? என்று ஆளுநரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பிரதம செயலாளர் யாருடைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பட்டவர் அல்ல.அவருக்கு மாகாணத்துக்குரிய நிதிப் பொறுப்பே வழங்கப்பட்டுள்ளது.நிதியமைச்சின் செயலாளரின் அதிகாரமே பிரதம செயலாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.எனவே அவர் யாருக்கும் கட்டுப்பட்டு…

Read More

முஸ்லிம்களின் அபிலாசைகளை உள்வாங்காத எந்தத் தீர்வுகளும் பயன்தராது

– காதர் முனவ்வர் –   முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளும் நலன்களும் கருத்தில் எடுக்கப்படாத எந்தத் தீர்வு முயற்சிகளும் நடைமுறைச் சாத்தியமற்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில் முஸ்லிம் புத்திஜீவிகள்,அரசியல் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது- சுமார் மூன்று தசாப்தகாலமாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தத்தின் கோரப்பிடிக்குள் தமிழ் மக்கள் மட்டும் சிக்கித் தவிக்கவில்லை, வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் சமூகமும் இந்த யுத்தத்தினால் அதேயளவு பாதிப்பையும்,…

Read More

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கின்றார்

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நபர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் இராமேஸ்வரத்தில் உயிரிழந்த நபரின் சடலம், இலங்கைக் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்…

Read More

உனகலா வெஹர புனர்நிர்மாண நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில்!

பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா வெஹர ரஜமஹா விகாரையை உலகெங்கிலுமுள்ள பௌத்த மக்கள் தரிசிப்பதற்குப் பொருத்தமான வகையில் புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) பிற்பகல் ஆரம்பமானது. இப்புனர்நிர்மாணப் பணி எழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் கருத்திட்டத்துடன் இணைந்ததாக பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள புன்னிய ஸ்தானங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நேற்று பிற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா ரஜமகாவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் பங்குபற்றி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து…

Read More

400 வருட பழைமைவாய்ந்த கருமலையூற்று, ஜும்ஆ பள்ளிவாசலை கைவிட்டு விடாதீர்கள்..!

-Mohamed Fairooz- திருகோணமலை, கருமலையூற்று பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டுள்ள இந்திய உத்தர பிரதேச தப்லீக் ஜமாஅத் குழுவினரையும் உள்ளூர்வாசிகளையுமே படத்தில் காண்கிறீர்கள். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ள கருமலையூற்று பிரதேசத்தில் அமைந்திருந்த 400 வருட பழைமை வாய்ந்த ஜும்ஆ பள்ளிவாசலானது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் படையினரால் முற்றாக இடித்து நிர்மூலமாக்கப்பட்ட பிற்பாடு அக் காணியில் சதுர வடிவான மிகச் சிறிய கட்டிடம் ஒன்று பள்ளிவாசல் எனும் பெயரில் படையினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட முதல்…

Read More