Headlines

பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்

பனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வொசிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போது, பனாமா மோசடிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று  குறிப்பிட்டுள்ளார். வரி சலுகையை பெற்றுக் கொள்வதில்…

Read More

ACMCயின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று மாலை (13-08-2015)சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல்; தலைமையில் நடைபெற்ற இந்த இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடலில் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்அமீர் அலி. முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளீட்ட பெரும் தொகையான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

Read More

கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக கலாநிதி.அப்துல் கபூர் நியமனம்!

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியும், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் சட்டபீட விரிவுரையாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.அப்துல் கபூர் அவர்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ்வரும் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் (CO-OPERATIVE EMPLOYEES COMMISSION) தலைவராக நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. (ன)

Read More

கொழும்பில் முகாமிட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

முஸ்லிம் காங்கிரஸ் அடுத்துவரும் தினங்களில் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கொழும்பில் முகாமிட்டுள்ளனர். கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க, மு.கா. முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு வந்திருப்பதாக கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். (JM)

Read More

சவூதி அரசால் வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்கள் பெறுவதற்கு யாழ் முஸ்லீம் மக்கள் பெரும் சிரமம்……

பாறுக் ஷிஹான் சவூதி அரசாங்கத்தினால் நோன்பு காலத்திற்கென வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்கள்  பெறுவதற்கு யாழ் முஸ்லீம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர். யாழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட மக்களிற்கு மேற்குறித்த பேரிச்சம்பழங்களை பெறுவதற்கு என்றுமில்லாதவாறு குடும்பவிபரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் கடிதம் மூலமாக கேட்டுள்ளார். அத்துடன் குடும்ப விபரங்கள் அவசியமாகவுள்ளதுடன் இதன்படி குடும்ப தலைவர்.தலைவி பெயர்,அடையாள அட்டை.முகவரி ,குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை என்பன அதில்…

Read More

கட­லுக்கு சென்ற மீன­வர்கள் இருவர் 20 நாட்­க­ளா­கியும் வீடு­ சே­ர­வில்லை

திரு­கோ­ண­மலை மாவட்டம் திருக்­க­டலூர் மற்றும் பள்­ளத்­தோட்டம் பகு­தி­களைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கட­லுக்குச் சென்ற நிலையில் இன்­றுடன் 20 நாட்­க­ளா­கியும் தமது வீடு­க­ளுக்கு வந்து சேர­வில்லை. இவர்கள் கட­லுக்குச் சென்ற பட­­கினை கடலில் கண்டு மீட்ட போதும் இவர்­களின் தகவல் தெரி­யாத நிலையில் பெற்றோர் தேடி வருகின்றனர்.

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மக்களுக்கு கருத்துரைகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் அமுதினி, இணைப்பாளர் லோகநாதன், யோசுதாஸ், நாகேந்திரன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

கத்தார் சகோதரர் இர்பானின் அனுபவம் இது

ஸூரத்துஜ் ஜுமர் 39 (கூட்டங்கள்) கடந்த ஞாயிறு இரவு வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. தங்குமிடத்தை அண்மிக்கும் வேளையில் வண்டியிலிருந்து இறங்கி வீதியின் ஓரமாக இருந்த கப்டேரியாவில் உழுந்து வடையும், தேனீரும் அருந்தி விட்டு வெளியேறும் வேளையில் இஷாஹ் தொழுகைக்கான அதான் ஒலித்தது பக்கத்திலிருந்த கெபின் சிறிய பள்ளிவாயலில் தொழுது விட்டுச் செல்லலாம் என எண்ணி பள்ளிவாயலுக்குள் நுழைந்தேன். ரமளானில் ஒவ்வொரு நாளும் குர் ஆனின் ஒரு சிறிய பகுதியை ஓதி…

Read More

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்

சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் இணக்கம் கண்டுள்ளன. அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விடயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இதேவேளை இலங்கையின் ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் சீனா ஆதரவை வழங்கும் என்று சீனாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

பலசேனா – விராது தேரரின் கூட்டுக்கு இலங்கையில் ஒருபோதும் இடமில்லை

பொதுபல சேனா மற்றும் மியன்மாரின் 969 கூட்டு சட்ட விரோதமானது. இந்தக் கூட் டணியின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது எனத் தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, இவ்விரு பெளத்த இனவாத அமைப்பு களும் இணைவதால் முஸ்லிம் கள் அச்சமடையத் தேவை யில்லை என்றும் தெரிவித்தார். இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பெளத்த அமைப்பான பொதுபல சேனா, சர்ச்சைக்குரிய 969 அமைப்பு டன் கைகோர்த்துள்ளது….

Read More

வவுனியா, பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

வவுனியா, பாவற்குளம் அல் பாத்திமா பாலர் பாடசாலையின் விடுகைவிழா அதன் ஆசிரியை சர்மிலா பளீல் அவர்களின் தலைமையில், இன்று சனிக்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்பள்ளிகளுக்கான வலய இணைப்பாளர் மனோகரன், மதவாச்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சஜீத் பாத்திமா றிஸ்னா, அல் மதீனா GTMS பாடசாலையின் பிரதி அதிபர் றமீஸ், வவுனியா…

Read More