Headlines

முதியோர் இல்லங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல முதியோர் இல்லங்களினதும் வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும், அதன் மூலம் முதியோர் இல்லங்களிலுள்ள முதியோர்கள் முகங்கொடுக்கும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்படுமென சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(20) நடைபெற்ற முதியோர்களுக்கான தேசிய கொள்கைகளை உருவாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற தேசிய கலந்துரையாடல் நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும்…

Read More

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம்! அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்பாடல் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த சட்ட மூலம் தொடர்பில் சிரேஸ்ட சட்ட வல்லுனரும்…

Read More

மைத்திரி நூல் எழுதுகிறார்

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவங்கள் பற்றிய நூல் ஒன்றை எழுத ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் அவர்கள் செய்தவை பற்றி இப்போது தன்னால் பேச முடியும் என்றும், இந்த விடயம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்களை எழுத முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி தனக்குத் தரப்படவில்லை…

Read More

நவ்ரூ தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்ப தீர்மானம்

இலங்கையர்கள் உட்பட நவ்ரூ தீவில் தங்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. புகலிடம் கோரி, சட்டவிரோத படகு பயணங்கள் மேற்கொண்டு வருகின்றவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம், ஏற்கனவே தமது நாட்டை வந்தடைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பீ.பீ.சீ. உலக சேவை தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் இந்த முடிவானது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகலிடம் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகளை…

Read More

புத்தளம் சாஹிரா கல்லூரியின் “பசுமைப்புரட்சி”

HITYP புத்தளம் சாஹிரா கல்லூரியின் 2006 O / L  மற்றும் 2009 A / L மூலம் கல்வி கற்று வெளியேறிய  மாணவர்கள் மூலம் உறவக்கப்பட்ட HITYP  அமைப்பினால் எதிர் வரும் 17/10/2014 ஆம் திகதி “பசுமைப்புரட்சி ” என்ற தொனியில் சாஹிரா கல்லூரியின் 70 வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் முகமாக HITYP  அமைபினரால் கல்லூரியின் மைதான வளாகத்தில் மரம் நாடும் நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது . ” மர நடுகையில் ஆரம்பித்து ,…

Read More

உயர் அடர்த்தி பொலித்தீன் தடை உற்பத்தியாளர்களின் சோகக்கதை

செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருக்கும் பொலித்தீன் தடையானது இலங்கையில் சில்லறை பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் கழிவகற்றல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இலங்கையின் உயர் அடர்த்தி (HDPE) பொலீத்தின் மற்றும் மீள்சுழற்சி கைத்தொழில் உள்ளவர்கள் இத்தடைக்கு எதிராக போர் முழக்கம் செய்துள்ளார்கள். இத் தடையினால் நாடு பூராகவும் உள்ள 345,000 பேர் தமது தொழில்களை இரவோடு இரவாக இழப்பர். அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சி சங்கத்தின் [ ACPMRA] தலைவர்…

Read More

நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசலின் புதிய நிர்வாகக் குழுவினருக்கு தவிசாளர் தாஹிர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்!

-முர்ஷிட்- நிந்தவூர் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் நேற்று (26) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து, ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபையின் தலைவராக அல்-ஹாஜ் பாறுக் இப்றாஹிம் தெரிவுசெய்யப்பட்டார். நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், ஊரின் பிரமுகர்கள் சகிதமாக நேரில் சென்று, ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குறித்த நிர்வாகத் தெரிவுக்கூட்டத்தில், உப…

Read More

வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக அமைச்சர் றிஷாத் மீண்டும் நியமனம்

வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக மீண்டும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதியினால் மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்திலும் வட மாகாண அபிவிருத்திக்குழு தலைவராக இருந்ததுடன் பல அபிவிருத்தித்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். நல்லாட்சி அரசாங்கத்திலும் 100 நாள் திட்டத்திலும் வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மீண்டும் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால்…

Read More

இன்று மஹிந்த புதிய அலுவலகம் ஆரம்பிக்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று (12) ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பத்தரமுல்லை, ஜயந்திபுர, நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ள இந்த நிகழ்வில்  கூட்டு எதிக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More

ஏழை துயர் துடைக்கும் ஆளுமை; அஷ்ரப் விட்டுச் சென்ற பணியில் றிஷாத்

– இஷ்ஹாக் – நிந்தவூர் – முகா தலைவர் ஹக்கீம் ஆட்டுக்குட்டியுடன் நிற்பதையும் .அ.இ.ம.கா தiலைவர் ரிசாத் பதியுதீன் ஆதரவற்ற ஏழைக் குடிசைகளுக்குள் அதிகாலை வேளை சென்று அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்ததையும் ஒப்பிட்டும் ஒப்பிடாமலும் ஏட்டுக்குபோட்டியான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஹக்கீம் ஆட்டுக்குட்டியுடன் நிற்பது என்பது முகா போராளிகளை குசிப்படுத்துவற்காகவும் அந்த போராளிகளின் முகநூல்களை அலங்கரிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட புகைப்படங்களே ஒழிய அதில் எந்தவித சமுக நலனும் இல்லை. ஆட்டுக்குட்டியை தூக்குவதனால் முஸ்லிம்களுக்கோ, முஸ்லிம் சமுகத்திற்கோ எந்தவித…

Read More

மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அமீன் – அமைச்சர் றிஷாத் நியமனம் வழங்கி வைப்பு (படங்கள் இணைப்பு)

எ.எச்.எம்.பூமுதீன் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின்( தேசிய உப்புக் கூட்டுத்தாபனம்) புதிய தலைவராக எம்.எம்.அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் இந் நியமனம் இன்று 30ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது. அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக பொறுப்பேற்கும் அமீன் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவரும் ஒருவராகும். அவருக்கு இன்று கிடைத்துள்ள இந்தப் பதவியை சிறந்த முறையில் பயன்படுத்த…

Read More

மாணவர்களுக்கு விருது வழங்கல் நிகழ்வில் இஸ்ஹாக் ரஹுமான் MP

கண்டி தர்மராஜ கல்லூரி கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கல் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.

Read More