Headlines

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட வீதி மக்களிடம் கையளிப்பு..

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடாட்டுகம சமகி மாவத்த வீதி புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களும் ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்…

Read More

விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி; அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார் தவிசாளர் தாஹிர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதிஒதுக்கீட்டில் 1000 பேருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை(12) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் அவர்களின் தலைமையில்…

Read More

முன்னாள் கோறளைப் பற்று மேற்கு பிரதேசபை உறுப்பினர் பாயிஷா நவ்பலின் முன்னுதாரணமிக்க அரசியல் பயணம்!!!

கடந்த பிரதேச சபை தேர்தலில் கோறளை பற்று மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னனியின் பங்காளி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது. குறிப்பாக பெண்களுக்கே வழங்கப்பட வேண்டி இருந்த இவ் ஆசனங்களை சுழற்சி முறையில் வழங்குவதற்கு கட்சி தீர்மானித்ததுடன் சமூகம் சார் பணிகளில் அர்ப்பணித்து செயற்படும் கெளரவ முன்னால் உறுப்பினர் பாயிஷா நவ்பல் அவர்களை தனது தெரிவில் கட்சி முன்னிலைப்படுத்தியது. அதற்காக கெளரவ முன்னாள் உறுப்பினர்…

Read More

மேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவின் செயலாளராக இருந்து அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லதீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுசின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை(12) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச…

Read More

அமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்

(ஊடகப் பிரிவு) முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஐனரஞ்சக எழுத்தாளருமான எப்.எம்.பைரூஸின் மறைவு சத்திய எழுத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அதிர்ச்சியென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தனது அனுதாபச் செய்தியில் அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளதாவது, மரணத்தின் பிடியிலிருந்து எந்த ஆத்மாக்களும் தப்பிக்க முடியாது.இறைவனின் இந்த நியதிக்கு இன்று ஆத்மார்த்த எழுத்தாளர் எப்.எம்.பைரூஸின்…

Read More

சித்திரை  புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

தமிழ் சிங்கள சித்திரை  புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வவுனியா மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான   றிஷாத்  பதியுதீனின் பணிப்புரையின் கீழ்  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பயுத்தீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் நேற்று (12) வழங்கி வைத்தார்கள் 

Read More

புதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

திருகோணமலை துறை முகமானது மூன்று வருட கால துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கந்தளாய் அந்நஜா அரபுக் கல்லூரியில் நேற்று (12) வெள்ளிக் கிழமை பிரதேச முக்கியஸ்தர்களுடன் பிரதேச அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய…

Read More

கம்பரெலிய திட்டம் மூலமாக கற்குழி மைதான புனரமைப்புக்கு 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு , பள்ளிவாயல்களுக்கும் தலா ஐந்து இலட்சம்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதஸ்தளங்கள்,மைதானம் புனரமைப்புக்கு கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிதி உதவியினை இன்று வியாழக் கிழமை (11) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா வழங்கி வைத்தார். பிரதி அமைச்சரின் கம்பரெலிய திட்டத்தின் கீழ் குறித்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன…

Read More

குருநாகல் முஸ்லிம் மையவாடியை மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கும் முயற்சிக்கு மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.

குருநாகல் பஸாரில் அமைந்துள்ள ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிக்கு சொந்தமான மையவாடிக்காணியை குருநாகல் மாநகர சபை சுவீகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மாநகர சபையின் ஆளும் கட்சியான பொது ஜன பெரமுனவும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தே இந்த தீர்மானத்தை மாநகர சபையில் கொண்டுவந்த போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் மொயினுதீன் அசார்டீன் கடுமையாக எதிர்த்ததுடன் இந்த முயற்சியை கைவிடுமாறும்…

Read More

ஒலுவில் துறை முக வளாகத்தினுள் உள்ள மண்களை அகழ்ந்து விற்பனை செய்ய அதிரடி தடை உத்தரவு

ஒலுவில் துறை முக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மண்களை அகழ்ந்து விற்பனை  செய்வதற்கு அதிரடி தடையினை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விதித்துள்ளார். கொழும்பு துறை முக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டிடத்தில் இன்று (10) புதன் கிழமை  துறை முக அதிகார சபை உயரதிகளுடன் இடம் பெற்ற  விசேட கலந்துரையாடலின் போதே இத் தீர்மானத்தை பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். துறை முக அதிகார சபையினால்…

Read More

மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் கடந்த 2019.03.23 ம் திகதி மாவடிப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் ஒன்று கூடலில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/ அல் – அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலை அபிவிருத்திகள், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் சம்மந்தமாகவும் அதிபருடன் ஆலோசனை செய்தார். இதன் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுடீன் பாடசாலையின்…

Read More

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தோர்களுக்காக புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (07) கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் யாசீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, பிரதேச சபை உறுப்பினர்கள் நௌபீல் , ஆதீர், சபீல், ரிபாஸ் நசீர் உட்பட பலர்…

Read More