Headlines

மட்­டக்­க­ளப்பில் இப்­ப­டியும் நடக்­கின்­றது!

மட்­டக்­க­ளப்பு – வந்­தா­று­மூலை பகு­தியில் அமைந்­துள்ள தங்­களின் கடை­க­ளுக்கு காப்­பு­றுதிப் பணத்­தினை பெறு­வ­தற்­காக திரு­டர்கள் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட மாதிரி கடை உரி­மை­யா­ளர்­களே தங்­களின் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட சம்­பவம் இடம்பெற்றுள்ளமை தெரி­ய வந்­த­தை­ய­டுத்து கடை உரி­மை­யா­ளர்கள் பொலி­ஸா­ரிடம் வகை­யாக மாட்டிக் கொண்­டுள்­ளனர். இதனால் ஏறாவூர் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வந்­தா­று­மூலை பிர­தான வீதி­யி­லுள்ள இரண்டு கடைகள் உடைக்­கப்­பட்டு கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் முற்­றிலும் பொய்­யா­னது என்றும் ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். வந்­தா­று­மூ­லையில் உள்ள இரண்டு கடை­களே இவ்­வாறு…

Read More

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டு யுவதி அடுத்தவாரம் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற யுவதி அடுத்த வாரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக தெரிவித்தார். நீண்ட நாள் விடுமுறை காரணமாக ஜனாதிபதியின் விடுதலைக்கான கடிதம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அனுப்ப தாமதமாகியதனாலேயே விடுதலை தாமதமானதென்றும் அவர் தெரிவித்தார்.கடந்த பெப்ரவரி மாதம் சீகிரியாவிற்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்ட மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த யுவதி உதயசிறி சீகிரிய சிற்பங்களில் கிறுக்கியதால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்…

Read More

இலங்கை பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியா பொருத்தமில்லாத நாடு!

இலங்கையின் இனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியா கட்டமைப்பு ரீதியாக பொருத்தமில்லாத நாடு என, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். தமிழ்நாட்டின் உணர்வு மற்றும் தேர்தல் அதிகாரங்களோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். இனப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை ஜயதிலக்க ஞாபகப்படுத்தியுள்ளார். மேலும் இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும்…

Read More

இஸ்லாமிய பெண்கள் அவர்களின் மத அடையாளமான பர்தாவை அணிவதை நாம் ஆதரிக்க வேண்டும்: பிரிட்டன் நீதிபதி

பெண்ணினத்தின் பெருமையை பேணுவதர்காக இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு வளையம் தான் பர்தா இஸ்லாத்தை விமர்ச்சிப்பதர்கு பலர்கள் இந்த பர்தா முறையையே காரணமாக கூறுகின்றர் பர்தாவை அணியும் பெண்கள் அதில் பெண்ணினத்தின் பாது காப்பை உணர்வதாக தெளிவாக சொல்லி கொண்டிருக்கும் போது அறிவாளிகள் என்ற பெயரில் வலம் வரும் சில முட்டாள்கள் பர்தாவை பற்றி விமர்ச்சித்து கொண்டிருப்பது வேதனைக்கும் வேடிக்கைக்கும் உரியதே இந்த நிலையில் பிரிட்டன் தலைமை நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி லோர்த் பர்தா பற்றி…

Read More

அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத்தலைவராக றிஷாத் பதியதீன் ஜனாதிபதியால் நியமனம்

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை வகுத்தல், அசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும், இந்த மூன்று மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்குபடுத்தல், அவதானித்தல் மற்றும் பணிகளுக்கான அனுமதியை வழங்கல் என்பன இந்தத் தலைமைத்துவத்தின் பணிகளாகும் என ஜனாதிபதி வழங்கியுள்ள இந்த நியமனக் கடிதத்தில்…

Read More

கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் – றிஷாத் பதியுதீன்

கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்.தமிழ் மக்கள் எம்மோடு இருக்கின்றார்கள் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள் இன ரீதியான சாயத்தை எம்மீது பூசுகின்றனர் என்றும் கூறினார். வவுனியா வெளிக்குளம் கிருபை இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போத அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் –…

Read More

தேர்தல் காலம் வந்ததும் கட்சி பாடலை போட்டு கல்குடா மக்களை ஏமாற்றுகின்றனர் -பிரதி அமைச்சர் அமீர் அலி

ஓட்டமாவடி அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் காலங்களில் கல்குடாவுக்குள் பிரவேசித்து கட்சி பாடல்களை போட்டு பிரதேசத்தில் இருக்கின்ற அரசியல் தரகர்களின் உதவியுடன் கல்குடா மக்களை ஏமாற்றிச் செல்கின்றனர் என சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று வெள்ளிக்கிழ்மை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் கல்குடா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்திய 2011,2012,2013ம் ஆண்டுகளுக்காக கல்குடாவிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவ, மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வில்…

Read More

காத்தான்குடி நூதனசாலையில் உருவச் சிலை: ACJU பத்வா குழு கடிதம்

காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூதனசாலை’ தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது…

Read More

100 நாள் வேலைத்திட்டம் வெற்றி: ஹர்ஷ டி சில்வா

நூறு நாள் வேலைத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, ஜனநாயக நல்லாட்சி உருவாக்கம், திருட்டுக்கள், ஊழல் ஒழிப்பு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களும் வெற்றிகரமாகி மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. கொள்கை திட்டமிடல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா இவ்வாறு தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பது அரசின் நோக்கமாகும். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கி வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இடைக்கால…

Read More

வளைகுடா நாட்டு “ஹவுஸ் டிரைவர்”…..(வீட்டு டிரைவர் ). – ஒரு சிறப்பு பார்வை!!

ரொம்ப நாட்களாக, வளைகுடா நாட்டு “ஹவுஸ் டிரைவர்கள பத்தி ஒரு பதிவு எழுதனுமுன்னு நினைத்தேன் . இப்பொழுது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது .பொதுவாக எல்லா வேலையிலும் ஒரு கஷ்டம் இருக்கும் ஆனால் கஷ்டத்தோடு சேர்த்து சங்கடமும் உள்ள வேலைதான் இந்த ஹவுஸ் டிரைவர் வேலை 1- அவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது அதை அவர்கள் வீட்டு முதலாளிதான் தீர்மானிக்க வேண்டும் . 2-கவலையை மறந்து நிம்மதியாக தூங்க முடியாது எந்த நேரத்தில் முதலாளி…

Read More

சுற்றுலா சோகம்.. பாணந்துறயில் இருந்து மன்னார் சுற்றுலா சென்ற குழுவில் நபீஸ் முக்தார் என்ற வாலிபர் ஆற்றில் முழ்கி வபாத்

பாணந்துறயில் இருந்து இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் மன்னாருக்கு சுற்றுலா சென்ற குழுவில் நபீஸ் முக்தார் என்ற 18 வயது வாலிபர் ஆற்றில் மன்னார் முழ்கி வபாத் ஆகியுள்ளார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மன்னாருக்கு சுற்றுலா சென்ற வேளை அங்கு மைதானம் ஒன்றில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க இறங்கிய குறிப்பிட்ட இளைஞர் நீரில் அடிபட்டு சென்று வபாத் ஆகியதாக தெரிய வருகிறது.

Read More

அல்லாஹ்விடம்‬ பிரார்த்தனை – (ஓர் உண்மை கதை)

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டிற்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. மருத்துவ ஆய்விற்கான விருது அதில் அவரிற்கு வழங்கப்படவிருந்தது. அவர் மிக நீண்ட காலமாக செய்த உழைப்பின், அராய்ச்சியின் பயனாக அந்த விருது அவரிற்கு வழங்கப்படவிருந்தது. அதனால் அவர் மிகவும் ஆர்வமாக அதனை பெற புறப்பட்டிருந்தார். விமானம் அவரையும் சுமந்தவாறு புறப்பட்டது. இரு மணி நேரம் பறந்த விமானம் திடீரென அருகில் இருந்த விமான…

Read More