Headlines

வடக்கு,   கிழக்கு அபிவிருத்திக்கு  பாரிய நிதி ஒதுக்கிடு –   அமைச்சர் ரிஷாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.  அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது, வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான  அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய…

Read More

இப்றாஹிம் நபியின் தியாகவாழ்வே உலகளாவிய முஸ்லிம்களுக்கான மிகச்சிறநந்த படிப்பினை -ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமீர்அலி

இப்றாஹிம் நபி அவர்களின் தியாகம் நிறைந்த வாழ்க்கைதான் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம் உம்மாக்களுக்கான மிகச்சிறந்த படிப்பினைiயாகும்.இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இத்தகைய தியாகத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவு கூர்ந்து புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் இவ்வாறு மலர்ந்துள்ள புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவாசாய நீர்ப்பாசன இராஜாங்க அi8மச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அச்செய்தியில் உலகளாவிய முஸ்லிம் உம்மாக்கள் பாரியளவிலான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள…

Read More

பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும் சுதந்திரத்தோடும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்களின் ஐம் பெரும் கிரியைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன். என துறை முகங்கள் மறறும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது பல்லின  சமூகங்கள் வாழும் இந்த …

Read More

“தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்” அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது… : மிகச் சோதனைமிக்க காலத்தில் முஸ்லிம்களாகிய நாம் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் முன்னுதாரணங்கள் யாவும் இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்தது.அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்றாஹிம் நபியின் இறை…

Read More

கொழும்பு புறக்கோட்டை வர்த்தக பெருவிழாவை அமைச்சர் ரிஷாட் அங்குரார்ப்பணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள வர்த்த பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார். சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில் இன்றும் நாளையும் ஏற்பாடு…

Read More

மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,பேசாலை மற்றும் சிறுதோப்பு கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.. இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலருமான றிப்கான் பதியுதீன் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் மாவட்ட இளைஞ்சர் விகாரபொறுப்பாளர் முனவ்பர் பிரதேசபை உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் ஊர்மக்களும் கலந்துகொண்டார்…

Read More

“அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாம் ? : சபையில் கர்ச்சித்தார் அப்துல்லாஹ் !!

அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று பாராளுமன்றில் குற்றஞ்சாட்டினார். அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதியில் நாங்கள் வெளிநாடுகளின் மூலப்பொருட்களில் தங்கியிருக்கின்றோம். எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவது அரபு நாடுகளில் இருந்தாகும்.அதேபோல் இங்கிருந்து அதுகமான பொருட்களை ஏற்றுமதி செய்வதும் அரபு நாடுகளுக்காகும். ஆனால் ஏற்றுமதியை ஊக்குவிக்க நேரடி பங்களிப்புச் செய்யும் அரபு நாடுகள் தொடர்பாக அண்மைக்காலமாக  முன்வைக்கப்படும் தவறான கருத்துக்கள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கான முறையான அனுமதியைப் பெற்று…

Read More

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் 240வது மாதிரி கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வு!!!

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களது திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட தோட்டவெளி கிராமத்திற்கான புதிய மாதிரிக்கிராமம் உத்தியோக பூர்வமாக மக்களுக்கு கையளிக்கப்பட்டது இன்று நடைபெற்ற ஜோசப் நகர் , ஜோசப்வாஸ் நகர் மாதிரிக்கிராமத்தினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரதிநிதியாகவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாட்…

Read More

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச மக்களுக்கு முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸினால் உதவிகள்.

இன்று நள்ளிரவு திடீரென கொழும்பு பகுதியில் வீசிய கடுமையான புயல் காற்றின் காரணமாக அப்பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது அந்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைபாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ பாயிஸ் அவர்களின் சொந்த நிதியில் பாதிக்கப்பட்ட வீட்டு மக்களுக்கு சீட் வழங்கி வைத்தார்.

Read More

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி  மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின்  பிரதிநிதிகள்   சந்தித்து பேசினர். நேற்று இரவு (05) கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில் கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் , வர்த்தக சங்க தலைவர் சித்தீக் ஹாஜியார்,ஆகியோர் உட்பட கல்முனை முக்கியஸ்தர்களும்  கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

சிறுபான்மை சமூகத்தினர் அதிகபடியான வாக்குகளை அளித்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

சிறுபான்மை சமூகத்தினர் அதிகபடியான வாக்குகளை அளித்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவி மூலம் அமைக்கப்பட்ட காந்தி மாதிரிக் கிராமம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமம் என்பன மக்களிடம் சனிக்கிழமை கையளிக்கப்பட்டது. கல்குடாப் பிரதேசத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான பிரதான…

Read More

பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் திருகோணமலைக்கு வெளியில் நியமனம் பெற்றவர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியாற்ற உத்தரவு

திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்ற அனைவரையும் தங்களது சொந்த மாவட்டத்தில் கடமைகளை பொறுப்பேற்று பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலையில் அண்மையில் நியமனம் பெற்ற 193 பட்டதாரி பயிலுனர்களில்  நியமனத்தின் போது பலர் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியில் உள்ள திணைக்களங்களில்  தங்களது கடமைகளை பொறுப்பேம்குமாறு கடிதங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இது விடயமாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்றவர்கள் பிரதியமைச்சரின் கவனத்திற்கு தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு நடவடிக்கைகளை பெற்றுத்…

Read More