Headlines

504 கோடி ரூபா நட்டத்தில் தபால் திணைக்களம்

கடந்த வருடம் தபால் திணைக்களமானது 504 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கான தபால் திணைக்களத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2014ஆம் வருடம் 298 கோடி ரூபா நட்டமும்,கடந்த வருடம் 504 கோடி ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திறமையற்ற நிர்வாகமே இந்த நட்டத்திற்கு காரணம் என்றும், தபால் திணைக்களத்தை கட்டியெழுப்ப நல்லாட்சி உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய திறமையான…

Read More

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லும் கொண்டயா

சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸார், தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.  சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு மற்றும் ஏனைய சாட்சிகளுடன் ஒப்பிடுகையில் கொண்டயா குற்றமற்றவர் என நேற்றைய தினம்  விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, குறித்த…

Read More

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இரு அமைச்சர்களும் அதிரடி மறுப்பு

24.11.216 கௌரவ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இன விரோத செயல்களை எதிர்த்தும், அதனைக் கண்டித்தும் பேசியதோடு; 1000 வருடங்களுக்கு மேலான சிங்கள – முஸ்லிம் நட்புறவுக்கு பங்கம் விளைவிக்க இடம்கொடுக்க முடியாதென்றும், சகல விதமான தீவிரவாதங்களை கண்டித்தும், சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவு உறுதியான முறையில் கட்டி எழுப்பப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் துணிந்து உண்மைகளை எடுத்துக் கூறி உரையாற்றியமைக்கு முஸ்லிம்கள் சார்பாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்…

Read More

நிலையான சமாதானம் பொருளாதார வளர்ச்சியின் மூலமே!

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவின் தலைவரும், பொருளாதார அலுவல்கள் மற்றும் வலுசக்தி தொடர்பான ஜேர்மன் பாராளுமன்ற  இராஜாங்க செயலாளருமான உவே பக்மேயர் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார். ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தின் போது ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்கல், இலங்கையில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புக்களை கண்டறிவதற்காக வர்த்தக  தூதுக்குழுவினரை அனுப்புவதாக வாக்குறுதி அளித்ததற்கு அமைய ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனி…

Read More

வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய நிகழ்வு ; பிரதம அதிதியாக ஹுனைஸ் பாரூக்

நிகவரெட்டி, வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு 2014.05.22ம் திகதி கல்லூரியின் அதிபர் எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது.  இந்நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  

Read More

ஜார்ஜ் புஷ் இஸ்லாத்தை ஏற்றாரா?

சமூக வளைதளமான வாட்ஸ் அப் இல் ஜார்ஜ் புஷ் இஸ்லாத்தை ஏற்றுவிற்றார் என்கிற செய்தி அதிகளவில் பரவி வருகிறது. அந்த செய்தியை ஆங்கில பத்திரிகை வெளியிட்டது. அவர் இஸ்லாத்தை ஏற்றார் என செய்தி எந்தளவில் உண்மையென நம்பமுடியவில்லை.

Read More

கைப்பற்றப்பட்ட கொக்கேய்னின் மொத்த, பெறுமதி 4500 மில்லியன் ரூபா (படங்கள்)

பேலியகொடை, கொள்கலன் களஞ்சிய தொகுதியில் மொத்தம் 300 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. கொள்கலன் களஞ்சிய தொகுதியிலுள்ள சந்தேகத்திற்குரிய இரண்டு கொள்கலன்களில் இருந்து கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்தே கொக்கேய்ன் கைற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி 4,500 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல்…

Read More

முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு 9.8 மில்லியன் ரூபா நிதி! அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை (25) இடம்பெற்ற போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிதியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக வாழ்வாதார முயற்சிகளுக்காக பகிர்ந்தளிக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேபோன்று வவுனியா, மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளை நிவர்த்திப்பதற்காக, அவர்களை…

Read More

ஆதில் பாக்கிர் மாக்காரின் மறைவு குறித்து அமைச்சர் றிசாத் அனுதாபம்!  

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகன் ஆதில் வபாத்தான செய்தியறிந்து, தான் மிகுந்த கவலை கொள்வதாகவும், அவரது குடும்பத்தாருடன் இணைந்து இந்த வேதனையைத் தானும் பகிர்ந்துகொள்வதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.   ஆதில் பாக்கிர் மாக்கார் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலே திறமையுள்ள மாணவராகவும், துடிப்பானவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே கல்வியிலே உயர்நிலையை அடைந்து, தலைமைத்துவம் சார்ந்த பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்தவர்.   இளைஞர் சமூகத்துக்கு அவர்…

Read More

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – கடந்த 12 வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இவ் இரத்ததான முகாம் எதிர்வரும் 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை காத்தான்குடி-06 பிரதான வீதியில் அமைந்துள்ள…

Read More

ஈரான், அமெரிக்க நாடுகளிடையே பேச்சு

ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளுக்கிடையில் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமெரிக்க, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இப்பேச்சுவார்த்தையின்போது, ஐ.எஸ். வாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்தும் ஜான் கெர்ரியும், ஜாவத் ஜரீபும் விவதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகியன கூட்டணி அமைப்பு

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன. பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய மூன்று அமைப்புக்களும் நேற்று இந்த கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்தர்களின் உரிமைக்காக விரிவான அடிப்படையில் குரல் கொடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து செயற்பட…

Read More