ஞானசாரருடன் அரசு மேற்கொள்ளும் பேச்சு, தீங்கையே விளைவிக்கும்
இனவாதம் பேசும் இனவாத கருத்துக்களை வெளியிட்டுவரும் ஞானசார தேரர் போன்றவர்களுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்ணயிக்கப்பட்ட சந்திப்பு செயற்றிட்டங்கள் (Engagement Process) பயனுள்ளவைகளாகத் தெரிந்தாலும் இறுதியில் தீங்கினையே (Impunity) விளைவிக்கும் என ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார். நல்லிணக்கம் தொடர்பாக கடும்போக்குவாத பௌத்த தேரர்களுடன் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மேற்கொண்டுவரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கருத்துக்களையே…
