Headlines

ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்து வழங்கும் நிகழ்வு

இளைஞர்கள் விளையாட்டுடன் தொடர்புடையவர்களாக தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கலாம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்தாட்டம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் கழக தலைவர் எஸ்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! இன்று எமது இளைஞர்கள் மத்தியில்…

Read More

வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடையாக உள்ளார்;அப்துல்லா மஹ்ரூப் 

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது தடையாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், இன்றைய (நேற்று) ஒழுங்குப் பத்திரத்தில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான…

Read More

அமீர் அலி தலைமையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (10) பிரதேச செயலக செயலாளர் உதயஶ்ரீ அவர்களினால் இறைவனக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், யோகேஷ்வரன் ,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம், கிருஷ்ணப்பிள்ளை , கருணாகரன், பிரசன்னா, மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாசா வாகனம் கையளிப்பு

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாசா வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனிபாவிடம் நேற்று (09) கையளிக்கப்பட்டது. லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசஹிப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜமீல் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read More

தூர சிந்தனையுடன் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது. சாய்ந்தமருதுவில் அமைச்சர் றிஷாட்

  அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள், தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் இன்னோரன்ன விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தூர நோக்க சிந்தனையுடன் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். லங்கா அசோக் லேலன்ட் பி எல் சி கம்பனியின் சாய்ந்தமருது – கல்முனையை மையமாகக்கொண்டு இயங்கவுள்ள கிளையினை சாய்ந்தமருதுவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…

Read More

“மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த உதவுங்கள்”; மன்னாரில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை.

 மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மன்னார் எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்குரார்ப்பணம் செய்து வைத்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் றிஷாட் கூறியதாவது: 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற குடிசன மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டே பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு வட்டார எல்லைப் பிரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார்…

Read More

எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து செயற்படுத்தும் எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) திறந்து வைத்தார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் அழைப்பின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்…

Read More

அரசின் பாதகமான நடவடிக்கைகளை தட்டிக்கேட்பதற்கு பின்வாங்க போவதில்லை வெளியேற்றிவிடுவார்களே என்ற பயமுமில்லையென, முசலியில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

  சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை, மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் நேர்மையுடன்  ஈடுபட்டு வருகின்றோம் என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலி தேசிய பாடசாலையின் மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்;று காலை (07.07.2017) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கூட்டத்தின்…

Read More

அரிசி இறக்குமதிக்காக தொழில்நுட்பக் குழு ஒன்று வெளிநாடுகளுக்கு பயணம் இரண்டு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில்  நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக அதிகாரிகள், உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்று மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், இந்தோனேசியா, பாகிஸ்தான், பர்மா ஆகிய நாடுகளிலிருந்து ஒரு லட்சம் மெற்றிக் தொன் நாடு, மற்றும் சம்பா அரிசி…

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஏற்பாட்டில் பாடசாலை கட்டிட அடிக்கல் நாட்டுவிழா!!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மோதரை புனித அந்தோனி ஆரம்ப பாடசாலையில் புதிய இரண்டுமாடிக்கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் மேல் மாகாண சபை முதல் அமைச்சர் இசுரு தேசப்பிரிய விழாவி கலந்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

Read More

மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ், தலைமையில் மேல்மகாண மக்கள் பிரச்சினை தொடர்பாக கலந்துறையாடல்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் மாகாண கல்வி அமைச்சிற்கு  வருகை தந்தபோது, மேல் மாகாணத்தில் மக்களுக்கிடையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.

அமைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதிஒதுக்கீட்டின் கீழ்புதுக்குடியிருப்பு பாடசாலையின் புனரமைப்பு கட்டிட வேலையை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஜே.எம். முஜாஹிர் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.எம். முஜீப், பாடசாலை அதிபர் பஸ்மி மற்றும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஹமீம் அவர்களுடன் புதுக்குடியிருப்பு பள்ளிவாசல் தலைவர் ஐயுப் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More