Headlines

‘மட்டக்களப்பில் எதிர்வரும் 05 வருடங்களுக்குள் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில், வீடுகள் இல்லாமல் இருக்கும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். “செமட்ட செவன” வீடமைப்பு திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில், 272 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதான நிகழ்வு விளாந்தோட்டத்தில், நேற்று முன்தினம் (19) மாலை இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More

தாருஸ்ஸலாம் விவகாரம்: முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யின் கண்டன அறிக்கை

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்திலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை…. கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். கடந்த 20 வருடங்களான இதற்கான காத்திரமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு முதல் நான் மாகாண சபை உறுப்பினராக எதிர்க் கட்சி வரிசையில் இருந்துகொண்டு பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். அதிகாரம் நமது கையில் இல்லாமையினால் குருகிய வேலைத்திட்டங்களை மாத்திரமே எம்மால்…

Read More

இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது!

துருக்கி இலங்கையின்முக்கிய பங்காளர். இலங்கைக்கும்துருக்கிக்குமிடயிலான பலமான உறவு நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கி அன்கராவில் நடைபெற்ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தின் இரண்டாவதுஅமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இலங்கை சார்பாக  அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும்   துருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலான விசேட குழுவும் இவ் அமர்வில் கலந்தக்கொண்டனர். அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது: துருக்கியும் இலங்கையும்; உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்ட தமது இராஜதந்திர உறவுகளை 68 ஆண்டுகளாகஅனுபவித்து வருகின்றனர். துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டுக்குழு முயற்சி 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்குமிடையிhன கூட்டுடமையின் ஒரு சின்னமாக இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி, நல்லிணக்கம், ,சமாதானம் மற்றும்  சுபீட்சம்  ஆகியவற்றின் பலன்களை முழு மக்கள் அனுபவிக்கின்ற உறுதி செய்யும் ஜனநாயகம், அதன் கட்டமைப்புகள் மற்றும்சட்டத்தின் ஆட்சியினை வலுப்படுத்த ஒரு திறந்த மற்றும் வெளிப்படையான நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகின்ற நேரத்தில் இலங்கை துருக்கி –  கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும்பொருளாதார ஒத்துழைப்பு மீதான முதல் சுற்று 26 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகின்றமை முக்கியதுவமானது. தவிர்க்க முடியாத பல்வேறு காரணமாக 26 ஆண்டுகளாக கூட்டுக் குழுவினை கூட்ட முடியவில்லை. இதனால் இருதரப்பு பரஸ்பர வர்த்தக மட்டம்  மற்றும் சர்வதேச தளம் மீதான வலுவான இருதரப்புஒருங்கிணைப்புக்கிடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்பட்டது. என்றாலும், 2012 -2013 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அங்காராவிலும் கொழும்பும்பிலும் வதிவிட தூதரகங்கள் நிறுவப்பட்ட பின்னர்குறிப்பாக இலங்கை மற்றும் துருக்கி இடையே உறவுகள் முறையே தழைத்தோங்கின. 2015 ஆம் ஆண்டு துருக்கி- இலங்கையிடையிலாக  இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தெற்காசிய சந்தையில் இலங்கையின் பொருளாதாரமானது முதலீடு மற்றும்வர்த்தகம் மீதான ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இன்று, இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆர்வமாக உள்ளதுடன் துருக்கி போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து அதன்பொருளாதாரத்தை விருத்திசெய்ய  விரும்புகிறது.; நம் நாட்டு மக்களின்  அபிலாஷைகளுக்காக நாட்டின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை வாய்ந்த நேரத்தில் முதல் முறையாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் ஒருமித்து, ஒரு சம்மதத்துடன் பொதுவானவிடயங்கள்  மீதான செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இது…

Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐ.நா. அறிக்கையாளரிடம் கையளிப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் றீட்டாவை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் (10.10.2016) கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சந்தித்தனர். இதன்போது இலங்கை முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் RRT சட்டத்தரணிகள் அமைப்பின் மூலம் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அரசியலமைப்பு சீர்திருத்தம், தனியார் சட்டம், தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம், மும்மண்ண முஸ்லிம் பாடலை மைதான விவகாரம், அழுத்தகம…

Read More

“பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்சப் பயன்களைப் பெற்றுக்கொள்ள சமூகம் முன்வர வேண்டும்” டாக்டர். ஹஸ்மியா வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- பெண்கள் மூலமாகவும் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளை, ஒட்டுமொத்த வாக்குகளால் ஆதரிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். கம்பஹா, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்காக இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல் நிகழ்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பெண்களை…

Read More

விஜேதாச ராஜபக்சவின் வெட்டுப் புள்ளி தொடர்பான பிரேரனை தோற்கடிக்கப்படும்,சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பு_ முன்னால் துறை முகங்கள், கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் எம்.பி

முன்னால் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் கொண்டுவரப்படுகின்ற பிரேரனைகள் தோற்கடிக்கப்படும் 19 ஆவது திருத்தங்கள் 20,21 ஆவது திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்பது நாடாளுமன்றில் தோற்கடிக்கப்படும் என முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். முள்ளிப்பொத்தானையில் இன்று (05) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் இவரினால் கொண்டு வரப்படும் விகிதாசார தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களின்…

Read More

எலபடகம லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- குருநாகல், எலபடகமையில் புதிதாக அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தின் கிளை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, மாகாணசபை உறுப்பினர் அஸங்க பெரேரா, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலவி, சதொச நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எரங்க ஏக்கநாயக்க மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.  …

Read More

ஹூனைஸ் பாருக் தான் ஏறிவந்த ஏணியினை உதைத்து விட்டு ஏறவும்,முடியாமலும்,இறங்கவும் முடியாமலும், -அமீர் அலி

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த 9 ஆம்; திகதி நாம் இந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று இருப்போமெனில் எமது சமூகத்தின் தலைவிதி மாறியிருக்கும் நாம் எங்கே போயிருப்போம் என்று தெரியாது என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீர் அலி எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் சமூகத்தின் தேசிய சொத்து என்றும் கூறினார். முசலி சிலாவத்துறையில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருக்கின்ற போது மேற்கண்டவாறு கூறினார்….

Read More

இலங்கையில் வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை

லண்டனை மையமாகக்கொண்ட வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை தமது அவசர கையடக்க தொலைபேசி பணபரிமாற்றல் சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இஇசெட் காஷ் என்ற இந்தசேவை தற்போது டயலொக், எடிசலாட் மற்றும் ஹட்ச் பாவனையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சேவையின் ஊடாக 14 மில்லியன் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்று நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் குறைந்த கட்டணங்களில் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடியாக பணத்தை அனுப்பமுடியும் என்று வேல்ட்ரெமிட் தெரிவித்துள்ளது.

Read More

அரசியல் எதிர்காலமற்றவர்களே மஹிந்த அணியில்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைந்துள்ள அதேவேளை  விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன போன்ற ஒரு சிலரே அரசியல் எதிர்காலம் அற்ற மக்களால் வெறுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் புதிய கட்சியொன்றை அமைக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

Read More

பதவி வெற்றிடம்

நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் மாத்திரமே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரிவுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களும்…

Read More

(வீடியோ & படங்கள் ) சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார் மியன்மாரின் அஷின் விராது

VIDEO Post by அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். download video_2014-09-27_09-16-49 பொதுபல சேனா பெளத்த அமைப்பு நாளை கொழும்பு சுகததாஸ அரங்கில் பிரமாண்டமான ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் ஏற்கனவே இலங்கை மற்றும் உலகில் உள்ள பெளத்த தலைவர்கள் 7000 பேர் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தும் மியன்மாரின் சர்ச்சைக்குரிய தேரர் என அழைக்கப்படும் அஷின் விராது வருவது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவித்து இருக்கவில்லை. அதேவேளை சற்றுமுன் மியன்மாரின் அஷின் விராது இலங்கையை வந்தடைந்ததாக பொதுபல சேனா அமைப்பு தனது…

Read More