Headlines

ஜெயக்குமாரி விடுதலை; அமெரிக்கா வரவேற்பு

ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசு விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். மேலும் ஜெயக்குமாரியின் விடுதலையானது சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வா ஆச்சிரமத்திலும் தங்க…

Read More

​கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1, 2 ,3 ,7, 8, 9 ,10 ,11 ,12 மற்றும் கொழும்பு 13 ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மாலிகாகந்தயிலுள்ள அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ள்படவுள்ள சுத்திகரிப்பு…

Read More

‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத மு.காவின் மரச் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கரைதுரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று மாலை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது,…

Read More

மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் வரிப்பத்தன்சேனை பகுதியில் பணிகளை ஆரம்பித்தார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.அன்வர்,  ஊரின் அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகள், கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஊர்ப் பிரமுகர்களுடன்  கலந்தாலோசித்தார். அத்துடன் இறக்காமம் பிரதேசபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானத்துக்குச் சென்று பார்வையிட்ட அவர், மைதானத்தை செப்பனிடல், சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளைக் கண்டறிந்துஅதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் மின்விளக்குகள் அற்ற பாதைகளைக் கண்டறிந்து, அந்த வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

Read More

ஆடை உற்பத்தி கண்காட்சி அமைச்சர் றிஷாதினால் அங்குரார்ப்பணம்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் 6 ஆவது தைத்த ஆடை உற்பத்தி கண்காட்சி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இக்கண்காட்சி மார்ச் 14 வரை விஐயராம மாவத்தை கொழும்பு 10 இல் உள்ள கண்காட்சி நிலையத்தில் நடைபெறும்.

Read More

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் வெளிநாடு செல்ல தடை

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக தமது கட்சிக்காரரான சேனாதிபதி நைஜீரியா செல்ல வேண்டியுள்ளதால் அவருக்கு அனுமதி அளிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கேட்டுக் கொண்ட போதிலும் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. காலி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் காரணமாகவே இவருக்கு வெளிநாடு செல்ல…

Read More

இலங்கையின் தொழில் முயற்சியாண்மை பொருளாதரா மறுசீரமைப்பில் பாரிய பங்களிப்பை நல்கும்… அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 

இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார். தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் 2017 ஆம் ஆண்டுக்கான மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

த.தே.கூட்டமைப்புடன் பேசுவதற்கு எந்நேரமும் தயாராக உள்ளோம்: றிசாத் பதியுதீன்

தமிழ்- முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண…

Read More

‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் இனவாதிகளின் திட்டத்துக்கு பலிக்கடாவாகாதீர்கள்’ மாந்தையில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான கோரிக்கை!

  -ஊடகப்பிரிவு- தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தலைமையில், சொர்ணபுரியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

தயா குருப் கம்பனியின் வெசாக் வெளிச்ச தோரணம்

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாண எதிா்கட்சித் உறுப்பினரும் ஜ.தே.கட்சி அமைப்பாளருமான தயா கமகே மற்றும் அவரது பாரியார்பிரதியைமைச்சருமான திருமதி கமகே அவா்களது தயா குருப் கம்பணியினால் வெசாக் வெளிச்ச தோரணம் மற்றும்  வெசாக் நிக்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் ஆரம்பித்து வைத்தனா். இவ் நிகழ்வு தெஹிவளை – நுகோ கொடையில்உள்ள பெப்லியானவில் தயா கம்பணியில் நடைபெற்றது.

Read More

இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களுக்கு அமைச்சர் ரிஷாட் நேரில் விஜயம் புனரமைப்புக்கு நிதி உதவியும், அகதிகளுக்கு நிவாரணமும் கையளிப்பு

-ஊடகப்பிரிவு இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள், இந்து கோவில்களின் புணரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். இந்தப் பிரதேசத்தில் 14 விகாரைகளும், இரண்டு பள்ளிவாசல்களும், ஒரு இந்து கோவிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களை அமைச்சர் சுற்றி பார்வையிட்ட பின்னர் அங்குள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியவற்றிற்கும் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும், வீட்டுப் பாவனைக்கு தேவையான பொருட்களையும்…

Read More