Headlines

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, காலி, களுத்துறை, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. மண்மேடுகள் சரிந்து வீழ்வதற்கும், மண்சரிவுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான வானிலை காரணமாக…

Read More

சமயத் தலைவர்களின் உதவி அவசியமானது – மைத்திரி

சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். சகல இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சகல சமயத் தலைவர்களினதும் உதவி அவசியமானது என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

Read More

சைபர் தாக்குதல்: இலங்கையர்கள் எண்மர் அடையாளம்

பங்களாதேஸின் மத்திய வங்கியின் ஊடாக சைபர் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எட்டு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக த ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 20 வெளிநாட்டவர்கள் தொடர்புப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் 8 பேர் இலங்கையர்கள் எனவும் 12 பேர் பிலிப்பினியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ACMC Membership Registration | reg.acmc.lk | அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் உறுப்பினராக இணைந்துகொள்ள

Click Here to Join with ACMC or Register your Membership on All Ceylon Makkal Congress (ACMC) REG.ACMC.lk / இங்கு க்ளிக் செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒன்லையின் படிவத்தை பூத்தி செய்யுங்கள்

Read More

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதே அடுத்த இலக்கு – கலாநிதி ஜெமில்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப்பிராத்தியத்தில் உருவாக்கப்பட்டதன் காரணமாக கல்வியின் அடிப்படையில் இப்பிராந்தியம் எவ்வாறு கல்வியில் உயர்வுற்றதோ அதேபோன்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றையும் நிறுவி இன்னும் கல்வியாளர்களை உருவாக்கி பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதே தங்களது இலக்கு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீனனுடைய பூரண அனுசரணையுடன் கலாநிதி ஏ.எம்.ஜெமீலினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் ஒரு…

Read More

பேராதனை பல்கலையில் சுகாதார மாநாடு

சர்வதேச சுகாதாரத்துறை மாநாட்டினை முன்னிட்டு பேராதனை பல்கலைக்கழகத்தினால் ஒரு சுகாதாரம் எனும் தலைப்பிலான மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த சுகாதார மாநாடு ஒரே சுகாதாரம் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.சுகாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற புதிய தீர்வு முறைகள் மற்றும் சர்வதேச சுகாதார சமூகத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற நன்மைகள்…

Read More

அமைச்சர் திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை ராஜினாமா BREAKINGNEWS

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

மனைவியின் சடலத்துடன் பஸ்ஸிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன்

பஸ்சில் பயணம் செய்து கொண்­டி­ருக்கும் போது உடல்­ந­லக்­கு­றைவால் உயிரிழந்த மனை­வி யின் சடலத்துடன்  நப­ரொ­ரு­வர் வலுக்­கட்­டா­ய­மாக இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மத்­திய பிர­தேச மாநிலம் தாமோ மாவட்­டத்தை சேர்ந்­தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனை­விக்கு உடல் நலக் குறைவால் பிறந்து 5 நாட்­க­ளே­யான குழந்தை மற்றும் தாய் சனியா பாயுடன் தனியார் பஸ் ஒன்றில் பயணம் மேற்­கொண்­டுள்ளார். மனை­வியின் உடல்­நிலை மிகவும் கவ­லைக்­கி­ட­மாக இருந்ததால் அவர் பஸ்ஸில் செல்லும்…

Read More

நல்லாட்சி அரசு பாரிய விலை கொடுக்க வேண்டி வரும் – அமீர் அலி

சிறுபான்மையினரைப் பாதிக்கின்ற எந்த விடயத்திற்கும் நல்லாட்சி அரசு பாரிய விலை கொடுக்க வேண்டி வரும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி அல் இக்பால் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் நூலகக் கட்டடத் திறப்பு விழா நேற்று (30) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வித்தியாலய அதிபர் ஏ.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய பிரதிக் கல்விப்…

Read More

மட்டக்குளி வாழ் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு மட்டக்குளியில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இஸ்மாயில் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்டீன், இலங்கை சீமெந்து…

Read More

முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம்; 

விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு” – தலைவர் ரிஷாட்! முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உலமாக் குழுவின் ஏற்பாட்டில், “சிறுபான்மை பிரதிநிதித்துவமும் உலமாக்களின் பங்களிப்பும்” என்ற கருப்பொருளில், வன்னி மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு, இன்றைய தினம் (03) மன்னாரில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு…

Read More

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு 110 மில்லியன் நவீன உபகரணங்கள்.

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினால் ரூபா 110 மில்லியன் பெறுமதியான நவீன பயிற்சி உபகரணங்களை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் (18) நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரூட் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் உயரதிகாரிகள், நிதியமைச்சின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More