Headlines

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு கடும்போக்கு சிங்கள அமைப்புகள் ஆதரவு

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை கொழும்பு, பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுபல சேனா, சிங்கள ராவய, ஹெல உறுமய, ராவணா பலய, பிக்சு பெரமுண , தர்ம விஜய பதனம, ஹெல ராவய உள்ளிட்ட சுமார் 53 அமைப்புகள் கலந்து கொண்டிருந்தன. சிங்களவர்களின் எதிர்காலம் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் மட்டுமே பாதுகாக்கப்படும். சிங்கள பௌத்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஒரே தேசியத் தலைவர் அவர்தான். மேலும்…

Read More

சட்டவிரோத இஸ்ரேலிடம் 24 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் பலஸ்தீன்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சிதைந்து போன பாலஸ்தீனத்தின் காசா நகரை புதுப்பிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது ஜூலை 8ல் காசா பகுதியில் பயங்கர தாக்குதலை இஸ்ரேல் துவக்கியது. 50 நாட்கள் நடந்த தாக்குதலில், காசாவின் பெரும்பகுதி சிதைந்தது. பாலஸ்தீன மறுகட்டமைப்புக்காக நன்கொடையாளர்கள் மாநாடு, அக்., 12ல், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடக்க உள்ளது. அதில், பாலஸ்தீனம் ரூ.24 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்க உள்ளது.

Read More

கட்சித் தாவல்கள் இந்தமாத இறுதிவரை ஒத்திவைப்பு

ஆளும் மற்றும் எதிரணி தரப்பினரின் கட்சி தாவல்கள் இம்மாத இறுதி வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் குறித்து உறுதியற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அரசில் உள்ள அரைவாசியினர் தமது பக்கம் வருவர் அப்படி வரமுடியாதவர்கள் அங்கு இருந்துகொண்டே தமக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியின் 20 தொகுதி அமைப்பாளர்கள் அரசுடன் இணைந்துக்கொள்வர் என்று திஸ்ஸ…

Read More

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், காணாமல் போனவர்கள் பற்றி கண்டறியும் அலுவலகம் மட்டும் போதுமானதல்ல.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றும் அவசியமாகின்றது. ராஜபக்ச கோட்பாடு போர் செய்வதாக கூறி திறைசேரியை காலியாக்கியதேயாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதனைப் போன்றே திருடர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமென நாம் அந்தக் காலத்தில் கூறியிருந்தோம். போர் இடம்பெற்ற காலத்தில்…

Read More

நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில்  கம்பஹா மாவட்டத்தின், நீர்கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (25) நீர்கொழும்பு சோண்டர்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபை  முதன்மை வேட்பாளருமான  இஹ்ஷான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட…

Read More

தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்வில் மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்காக புதிய தீர்மானங்கள் எடுப்பதற்காக முன் மொழிகள் பற்றிய ஒரு பட்டறை கொழும்பில் நடத்தப்பட்டது இந்த கருத்தரங்கில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாம்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

கல்வி நிர்வாக சேவைக்குள் ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை

இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. சேவை அனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இல் நிலவும் பொது மற்றும் விசேட சேவை பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை நேற்று முந்தினம் 10 ஆம் திகதி…

Read More

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் மற்றும் இஸ்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் – தாஹிர் எம்.பி சந்திப்பு!

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் இஸ்வா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆகியோருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிருக்குமிடையிலான சந்திப்பொன்று, புதன்கிழமை (01) குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. மேற்படி சந்திப்புகளின் போது, நிந்தவூரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பின் முக்கியத்துவம், மார்க்க ரீதியான எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் ஊரின் அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்புக்களில், கட்சியின் நிந்தவூர் மத்திய குழு தலைவரும் முன்னாள் பிரதேச சபை…

Read More

அரசியல் எதிர்காலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும்! திஸ்ஸ அத்தநாயக்க

அரசியல் எதிர்கலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் பொருத்தமான தருணத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்களை பிழையாக வழி நடத்துகின்றன. இரண்டு கட்சிகளினதும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலிருந்தே இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் செயற்படத்…

Read More

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் கைது

வனாத்தவில்லு – போம்பரிப்பு பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 8 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமியை  தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Read More

அ.இ.ம.கா.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் நிதியுதவி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் பள்ளிவாசல்கள், பௌத்த ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்து கோயில்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மோதரை ஆனந்தா கல்லூரியில் (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் மற்றும் சகல மதங்களையும் சேர்ந்த மதகுருக்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

Read More

நவம்­பரில் இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்தல்

எதிர்­வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் மட்டு.மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் மாவட்ட உத­விப்­ப­ணிப்­பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இந்த இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இம் மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இதில் மண்­முனை வடக்கு, ஏறா­வூர்­பற்று, கோற­ளைப்­பற்று தெற்கு, கோற­ளைப்­பற்று, கோற­ளைப்­பற்று வடக்கு ஆகிய பிர­தேச செய­லாளர்…

Read More