Headlines

சவுதி அரேபியாவில் இலங்கை பெண் மரணம்

சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சவுதி அரேபிய “அராப் நியூஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் குவேற் ஆகிய எல்லைப் பிரதேசமான கார்பியில் வட கிழக்கே உள்ள நகரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 35 வயதான இந்த பணிப்பெண், நீண்ட நேரமாக அவரது அறையில் இருந்து வெளியே வர தவறியதனை அடுத்து தொழில் வழங்குனர், அவரது அறை கதவினை உடைத்த போது குறித்த இலங்கை பணிப் பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்….

Read More

தேர்தலில் களமிறங்கமாட்டேன், அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா செய்வதாகவும் இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவம் தெரிவித்துள்ளார்.vk

Read More

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 1199 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து ஆயிரத்து 199 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அரச வளங்களை முறையற்ற விதத்தில் தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை குறித்து 155 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதிக படியாக 254 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் தலைமையில் இன்று (06) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கெளரவ அதிதிகளாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பிரதியமைச்சர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், அனோமா கமகே,…

Read More

பேலியகொட சந்தியில் துப்பாக்கிச் சூடு

பேலியகொட – நுகேவீதி சந்தியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்  முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் சிறு சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

வறட்சி, வெள்ளப் பெருக்கினை நிறுத்த அரசாங்கத்தினால் முடியாது: நாமல் ராஜபக்ச

மழை, வெள்ளம் ஏற்படும் போது மழையை நிறுத்தவும் வறட்சிக் காலத்தில் வெயிலை நிறுத்தவும் அரசாங்கத்தினால் முடியாது. எனினும், மக்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்ல நிவாரணங்கள் வழங்க முடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மக்கள் நம்ப வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டில் நிலவி வரும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்கப்படும். நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முயற்சி எடுக்கப்படும். தொடர்ச்சியாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் கனேவல்பொலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு…

Read More

ஹமாஸுக்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை

ஐக்கிய அரசு தொடர வேண்டு மானால் ஹமாஸ் அமைப்பு காசாவில் தனது செயற்பாடுகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவை ஆளும் 27 பிரதி அமைச்சர்கள் கொண்ட நிழல் அரசு குறித்து அதிருப்தி வெளியிட்ட அப்பாஸ் அங்கு ஒரு அரசுதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இஸ்ரேல் முன்னெடுத்த 50 நாள் தாக்குதலில் இருந்து காசா மீண்டு வருகிறது. இந்த மோதலில் 2,100க்கும் அதிகமான பலஸ்தீனர் கொல்லப் பட்டதோடு…

Read More

வெலே சுதா மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு!

பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் கம்பொல வித்தான சமந்தகுமார மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட வெலே சுதாவுக்கு நீதிவான் பிரித்தி பத்மன் சூரசேன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Read More

BREAKING NEWS மைத்ரி சிறிசேன பொது வேட்பாளர் என்பது உறுதி

நமது நிருபர்  மைத்ரி சிறிசேன பொது வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது . இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு, டவுன் ஹாலில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்திருங்கள். www.acmc.lk

Read More

சஜின் வாஸூக்கு பிணை

மிஹின் லங்கா நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கலில் 833 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைகுழுவினால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவர், இரண்டறை இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் முன்னிலையில், இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு…

Read More

மீண்டும் டெங்கு அபாயம்

காலி மாவட்டத்திகுட்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்றும் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அக்மீமன, பத்தேகம, அம்பலாங்கொட மற்றும் அமதுவ ஆகிய பிரதெச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தொற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More