Headlines

பதவி விலகுவதாக டலஸ் அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். vk

Read More

றிசாட் பதியுதீனும் ஜனாதிபதியும்

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்திற்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் இராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக நன்கு திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களின் மீது தொடர்…

Read More

வன்னி முஸ்லிம் பிரதிநிதுத்துவத்தைக் குறைக்க இருமுனை யுத்தம்

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வன்னி மக்களின் முதுபெரும் முதுசம் றிசாத் பதியுதீன் அவர்களாவர். அவர் இம்மக்களுக்குச் செய்துள்ள சேவைகள் அளவிட முடியாதவை ‘சர்வதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வலிமையானவர் பட்டியலில் அவரும் ஒருவர்’.இவரும்,இவரின் அரசியல் வழிகாட்டலும் வன்னி முஸ்லிம்களுக்கு போதும். வெளியில் இருந்து வந்த யாரும் அரசியல் புகட்டத்தேவையில்லை.வன்னி முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஆரம்பத்தில் ஒருவர் மட்டும் தெரிவு செய்யப்படுவது வழக்கம் , பின்னர் அத்தொகை இரண்டாக மாறியது.அதன் பிற்பாடு அத்தொகை மூன்றாக அதிகரித்துள்ளது. அகில இலங்கை மக்கள்…

Read More

அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவீட்டு ஆய்வகம்

தெற்காசியாவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய அளவீட்டு ஆய்வகம் ஹோமாகமயில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீனினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உற்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

அல் ஆகில் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க கோரிக்கை.!

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி இலங்கை பல்கலைக்கழகங்களில்  மருத்துவம், பொறியியல், கணினி, விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு தெரிவான வருவாய் குன்றிய மாணவர்களிடமிருந்து அல்-ஆகில் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகைமைகளைக் கொண்ட மாணவர்கள் எழுத்துமூல வேண்டுகோள், பல்கலைக்கழக மாணவ தகைமையை உறுதிப்படுத்தும்  ஆவணத்தின் போட்டோ பிரதி மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி என்பவற்றை இணைத்து 2016 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அல் ஆகில் புலமைப்பரிசில் நிதியம், 23/3,…

Read More

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கான தடை தற்காலிகமாக நீக்கம்

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பொது அமைதி, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில்  கருத்துக்களை  வழங்குவதற்கு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டதை தொடர்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவத்தார். எதிர்வரும் 21 ஆம் திகதியில் இருந்து முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை

லண்டனை மையமாகக்கொண்ட வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை தமது அவசர கையடக்க தொலைபேசி பணபரிமாற்றல் சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இஇசெட் காஷ் என்ற இந்தசேவை தற்போது டயலொக், எடிசலாட் மற்றும் ஹட்ச் பாவனையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சேவையின் ஊடாக 14 மில்லியன் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்று நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் குறைந்த கட்டணங்களில் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடியாக பணத்தை அனுப்பமுடியும் என்று வேல்ட்ரெமிட் தெரிவித்துள்ளது.

Read More

முறையான சுயதொழில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் றிஷாத்

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், தராபுரம் அல் – மினா மகா வித்தியாலயத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் இந்தத் தகவலை…

Read More

நாமலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணச் சலவை சட்டத்தின் கீழ் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 12.5 கோடி ரூபாவை பயன்படுத்தி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தை கொள்வனவு செய்தமை சம்பந்தமாகவே இந்த…

Read More

றிஷாத் – ஹக்கீம் தொலைபேசியில் மனம் விட்டு உரையாடினர்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் ஸ்ரீலங்கா முஸ்லிம் நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும்,நாட்டின் நல்லாட்சிக்குமாக எடுத்திருக்கும் முடிவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வரவேற்றுள்ளதுடன்,தமது பாராட்டினையும் தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் கூட்டத்தினையடுத்து கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்,தாம் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளருடன் இணைந்து கொள்வதாக அறிவித்ததையடுத்து,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய…

Read More

மௌனம் காக்கும் மேலாண்மைவாதம்! ஐக்கியமே சமூக இருப்புக்கான மார்க்கம்.

ராணுவ யுத்திகளும்,ஆயுதப் பலமும் பயங்கரவாதத்தை மௌனிக்கச் செய்ததைப் போல், அரசியல் யுக்திகளும் இராஜதந்திர நகர்வுகளும் பேரினவாதத்தை மெளனம்காக்க வைத்துள்ளது. பௌத்தர்களின் 2500 வருட கலாசாரங்கள் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் ஏனைய நாகரீகங்கள் மற்றும் இனங்கள் தலைகுனிந்து வாழவேண்டும் என்று, கடும்போக்கு தேரவாதம் நினைக்கிறது. இந்தக் கடும்போக்கிற்குப் பின்னாலுள்ள சக்திகளை அடையாளம் காணும் வரை எமது நாட்டில் எதையும் சாதிக்க முடியாது.இவர்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லைதான்.ஆனால் எத்தனை வீதமான பௌத்தர்கள் இவர்களை…

Read More

முரண்பட்ட பாதையில் செல்வோரும் சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டும் நுரைச்சோலையில் அமைச்சர் றிஷாட் அழைப்பு..

சிறுபான்மை சமூகத்தின் பெரும்பாலானோர் ஒன்று பட்டு, ஓரணியில் இருக்கும்போது,நம்மில் சிலர் எதிரணியில் பயணிக்காமல் சமூகத்தை முன்னிறுத்தி, எதிர்கால விமோசனத்திற்காக சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் புத்தளம் நுரைச்சோலையில் நேற்று மாலை (12) இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.. மக்கள் காங்கிரசின் நுரைச்சோலை அமைப்பாளர் ஹஸீப் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளில் 90சதவீதமானவை…

Read More