Headlines

ஜனாதிபதியால் இனி தூங்க முடியாது – ராஜித

தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார் தட்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றாக கழற்றாது ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் குறிப்­பிட்டார். பொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;…

Read More

சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் : ஜனாதிபதி வாழ்த்து

நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக அமைய மனமார பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாந்தியும் சமாதானமும் நிறைந்த சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வேலை வாய்ப்புக்களை பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார ஆகியோருக்கு இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா கவர்ச்சிமிக்க மற்றும் தொழில் வாய்ப்புகள் பரவலாக காணப்படுகின்ற நாடு என்ற வகையில் ஐக்கிய அரபு…

Read More

கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் போரதீவுப்பற்றில் வாழ்வாதார உதவிகள்.

கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்….

Read More

சட்டம் மற்றும் ஒழுங்குகளால் அரசாங்கத்துக்கு வருமானமிழப்பு

கெலும்பண்டார, யொஹான்பெரேரா தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் காரணமாக, அரசாங்கம் வருமானத்தை இழந்து வருகின்றது என்று, பொதுக்கணக்கு குழுவின் நாடாளுமன்ற கண்காணிப்புகுழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கை, குழுவின் தலைவர் பிரதியமைச்சர் லசந்த அலகியவண்ணவால் சமர்ப்பிக்கப்பட்டள்ளது. ஒரு கணினி தரவு முறைமையைக் கொண்டு வந்து, இந்தக்குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி சபை உள்ளிட்ட அமைச்சுக்கள் அடங்களாக மொத்தம் 41 அரச நிறுவனங்களை உள்ளடக்கி இந்த ஆய்வு…

Read More

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை முன்கூட்டிய அனுமதி இல்லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் போது நாணயக் கட்டுப்பாட்டு தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அந்த நிலைப்பாட்டில்…

Read More

நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு

வவுனதீவு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு (25) இணைப்பாளர் மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு நிதியை கையளித்தார். இந்நிகழ்வுக்கு மாவட்ட இணைப்புச் செயலாளர் லோகநாதன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

இந்திய விமானத்தை தேடும் பணியில் ஆராய்ச்சிக் கப்பல்!

இந்திய விமான படைக்கு சொந்தமான மாயமான விமானத்தை தேடும் பணியில் ஆராய்ச்சிக் கப்பல் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 22ஆம் திகதி போர்ட் பிளேயருக்கு பயணித்த ஏ.என்.32 என்ற விமானம் காணமல் போனது. குறித்த விமானம் கடல் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளகியிருகலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த கடல் பகுதியானது, 3,500 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரை ஆழம் இருப்பதால், விமானம் விழுந்த பகுதியைக்…

Read More

உயர்தர விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என். ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். இந்த காலப்பகுதியில் 6 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருக்கும் எனவும் மேலும் அவற்றுடன் மேலும் சில பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா…

Read More

அரச மருத்துவரின் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் – ராஜித

தமக்கெதிராக அரச மருத்துவ சம்மேளனத்தினர் வழக்குத் தாக்கல் செய்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக முன்னதாக அரச மருத்துவர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறித்த பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளக பயிற்சிகளுக்கு அரச மருத்துவமனைகளில் அனுமதி வழங்கியமைக்கு எதிராகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, தமது தரப்பு நியாயத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் சேனாரட்ன, நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு ஏற்பவே மாலபே…

Read More

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்அனைத்து இலங்கையருக்கும் அரச நிறுவனங்களில் குடியுரிமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலினூடாக தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமைஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்பு கூறுவதனூடாக  மக்கள் அதிகாரத்தை உறுதிபடுத்தல்-மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் என்பனவாகும் 1.தேர்தல் ஆணைக்குழு 2. அரச சேவைகள் ஆணைக்குழு 3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு 4. கணக்காய்வு ஆணைக்குழு 5. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 6. லஞ்ச ஊழல் ஆணைக்குழு 7. நிதி ஆணைக்குழு 8. எல்லை நிர்ணய ஆணைக்குழு…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

கொலன்னாவை வெல்லம்பிட்டிய பிரதேச செயலாளா் பிரிவில் 36 ஆயிரம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.. இம் மக்களுக்காக உடன் தமது சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் வீட்டின் ஆரம்ப செலவுகளுக்காக முதற்கட்டமாக 10ஆயிரம்ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேற்று (18)ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து பகிா்ந்தளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிஙக நிதி அமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு . பராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. இங்கு…

Read More