Headlines

கருணாவுக்கு உதவிய அலிசாகிர் மௌலானாவின் வாக்குமூலம்!

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப்பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்த அலி சாகிர் மௌலானா, அதுபற்றிய தகவல்களை கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். ‘கருணாவின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த போது, அதுபற்றித் தாம் பிரதமராக இருந்த…

Read More

வத்தளையில் இரவு வேளையில், ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள்

வத்தளை அவரகொட்டு பகுதி மக்கள் நேற்றிரவு (07) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றினால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வத்தளை, ஹெந்தலை, அவரகொட்டுவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றிலிருந்து வௌியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் புகையினால் சூழல் பாரியளவில் மாசடைவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமது சுகாதார நிலைமை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூழல் மாசடைவது தொடர்பில் தொழிற்சாலை முகாமைத்துவம் மற்றும் பொலிஸாருக்கு…

Read More

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீது நாட்டம் கொண்டதல்ல வாக்குப்பலத்திலேயே நம்பிக்கைகொண்டிருக்கின்றது” தர்காநகரில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹஷீப் மரிக்கார் தலைமையில், தர்கா நகரில் நேற்று மாலை (12)…

Read More

வெள்ளை வேன் கலாச்சாரம் ஊடுருவ இடமளிக்க வேண்டாம் : மன்னார், தாராபுரத்தில் பிரதமர் ரணில் கோரிக்கை

பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபயவின் வெள்ளை வேன் கலாச்சாரத்தை மீண்டும் ஊடுருவச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று (02) மாலை மன்னார் தாராபுரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிகான் சரிப் தலைமையில் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்களான ரவி கருனாணாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும் பங்கேற்றனர். பிரதமர் மேலும் கூறியதாவது,…

Read More

நட்ட ஈடு கோரும் சீன நிறுவனம்

கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தாமதமாவதால், அதற்கான நட்டஈட்டுத் தொகைச் செலுத்துமாறு, இவ்வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மேற்படி துறைமுக நகரத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால், குறித்த சீன…

Read More

சு.கவின் கலவான தொகுதி அமைப்பாளர் இராஜினாமா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவானத் தொகுதி அமைப்பாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர இராஜினாமா செய்துள்ளார்.

Read More