Headlines

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள்

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார். புகைப்படங்களை போலியான முறையில் பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக அநேகமானவர்கள் முறைப்பாடு செய்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையே இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக…

Read More

கொழும்பு – அவிசாவளை வீதிக்கு மீண்டும் பூட்டு

கொழும்பு – அவிசாவளை வீதி, சாலாவ இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சேதமான பொருட்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Read More

றிஷாத் பதியுதீனுக்கு எதிராக, சிங்கள ராவய தேர்தல்கள் ஆணையாளரிடன் முறைப்பாடு

தேர்தல் காலத்தில் புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடன் இன்று முறைப்பாடு தெரிவித்துள்ளது. புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் சட்டவிரோதமான முறையில் 60 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார். குறித்த நியமனக் கடிதங்களில் கனியமணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் கையொப்பதற்கு பதிலாக பிறிதொருவரின் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது….

Read More

‘விஜயாபிமானி’ பாராட்டு விழா!

வடமேல் மாகாண தொழில் முயற்சியாளர்களை பாராட்டும் ‘விஜயாபிமானி’ பாராட்டு விழா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில்,   குருணாகல்  மாகாண சபை கேட்போர்கூடத்தில் (24) அன்று இடம்பெற்ற போது, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வடமேல் மாகாண பொருளாதாரத்திற்கு நேரடிப் பங்களிப்புகளை வழங்கும் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமேல் மாகாண சபையின் வழிகாட்டலில், வடமேல் மாகாண விவசாய சேவைகள்…

Read More

மின் தடைகளை அறிவிப்பதற்கு புதிய அவசர இலக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின்போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணக் கட்டுப்பாட்டு நிலையத்தின் அவசரத் தொலைபேசி இலக்கமான 026-2054444 ற்கு உடனடி அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் துரிதமான பலன்களை மின்பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் திருமதி பி.அனிதா மின்பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

Read More

றிஷாத் பதியுதீன் குழுவினர் அட்டாளைச்சேனைக்கு விஜயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றனர். நேற்று சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.சீ.எம் சமீர் ஹாஜி அவர்களின்…

Read More

VAT வரி மீதான 5 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானம்

VAT வரி வீதம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுகள் 5ஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது. tm

Read More

வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல் அக்ஸா மத்கபின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்

வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல் அக்ஸா மத்கபின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு, மக்தபின் அதிபர் கே ரபிவூத்தீன் தலைமையில்  நடைபெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இதன் போது ஊர் இளைஞர்களால் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் வி ஜயதிலக, வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் என் பி ஜுனைத், எஸ் ஐ எம் இமாம் உட்பட பலர்…

Read More

ஆகஸ்ட் முதல் இ.போ.ச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான கட்டணங்களை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி பஸ் கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.

Read More

குடி நீர் பிரச்சினைக்கு தீர்வு!!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் பெரியாற்று முனை கரையோர பகுதிகளில் உள்ள பகுதிக்கு குடி நீர் இணைப்புக்களை பெறுவதற்கான குழாய் பதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இன்று (01) குறித்த குழாய் நீருக்கான ஆரம்ப கட்ட வேலைகளை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா ஆரம்பித்து வைத்தார். மக்களின் நீண்ட கால குடி நீர் பிரச்சினையை தீர்க்கும்…

Read More

 ஸ்மார்ட் சிட்டிக்கு தென்கொரியா முதலீடு!

இலங்கையில் ஸ்மார்ட் சிற்றியை உருவாக்க 63.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 9,346.6 பில்லியன்) முதலீடு செய்ய தென்கொரியா முன்வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்மார்ட் சிற்றியை நிர்மாணிப்பதற்கு முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் தென்கொரிய காணி, தென்கொரியாவின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சரான காங் ஹோ இன் மற்றும் இலங்கையின் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்தி தெரிவித்தது. தென்கொரியாவின் சியோல் நகரிலுள்ள ஹோட்டலில் வைத்து…

Read More

தேர்தல் கோரி நீதிமன்றம் செல்லும் மஹிந்த

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். உடனடியாக இந்த தேர்தலை நடத்துமாறு கோரப்படுகிறது. ஆனால் இது திட்டமிட்டே பிற்போடப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடி அதனை நடத்த செய்யவிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

Read More