Headlines

கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா பிரதம அதிதியாக நவவி எம்.பி

தில்லையடி ரத்மல்யாய பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்க்கான அடிக்கல்நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 15 இலட்சம் ரூபாய் செலவில் இம்மைதானம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார் என ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இப்படி கோருவதற்கு, அரசியலமைப்பில் இடமில்லை. ‘மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார். இதுவொரு தனிப்பட்ட  பிரச்சினையாகும். அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு அமையவேனும் மீண்டும் அவர் போட்டியிட முடியாது. இதனால், இதுவொரு பொதுப்…

Read More

‘நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக கிடைத்த அதிகாரத்தினால் நேர்மையுடன் பணியாற்றியிருக்கின்றோம்’

வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   மன்னார், கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் சஞ்சிகை வெளியீடு, மாணவர் கெளரவிப்பு, “ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனினால்” தெரிவுசெய்யப்பட்ட 100 பல்கலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் 2019 உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பும் நேற்று மாலை (29) நடைபெற்றது….

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் மனந்திறந்து பேசுகின்றார்!!!

20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கில் அமைதிச் சூழல் ஏற்பட்டதனால் மீளக்குடியேறும் ஆர்வத்திலும், எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்திற்கு மக்கள் வந்தபோது இந்தப் பிரதேசம் இருந்த நிலைமை, அப்போது வந்த மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். அவர்கள் வாழ்ந்த காணிகள் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தும் கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் தகர்ந்தும், இடிந்தும், உருக்குலைந்தும் கிடந்தன. முசலிப் பிரதேசத்திலுள்ள அத்தனை கிராமங்களும், ஒன்றுடன் ஒன்று காடுகளால் பின்னப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருந்தன. மொத்தத்தில் இந்தப் பிரதேசம் இருளடைந்த பூமியாக…

Read More

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

சீனத்தேசத்திலிருந்து உலகலாரீதியாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இதற்கான பாடசாலை மாணவர்கள் சுத்தம் சுகாதாரம் பேணி நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் மீரா நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்று  (30) இடம் பெற்ற தேசிய மட்டத்துக்கு சிறுவர் அத்திலாந்திக் போட்டியில் தெரிவான  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில்…

Read More

புலனாய்வு துறை அதிகாரி மரணம்

கம்பஹா, கொட்டதெனியாவில் படுகொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான செயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கடமைக்காக சென்றிருந்த பொலிஸ் விசேட பணியகத்தின் (புலனாய்வு பிரிவு) கான்ஸ்டபிள், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலி காரணமாகவே அவர், மரணமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவருடைய சடலம் திவுலுப்பிட்டிய ஹோரகஹமுல்ல வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்

– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More

நல்லிணக்கத்திற்கான கால வரையறை விதிக்கவில்லை

இலங்கையில் நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான கால வரையறையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையில் நீண்ட காலமாக நீடித்த யுத்தத்தில் இருந்து மீளுவதற்கு கால அவகாசம் தேவை என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆகவே இதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

Read More

கோட்டாவால் வெளிச்சவீடு திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு )

இராணுவ ஊடகப்பிரிவு காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்தார். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் அழைப்பை ஏற்று இருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச வரலாற்று முக்கியம் வாய்ந்த காங்கேசன்துறை வெளிச்ச வீட்டினை நேற்று திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலர் பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டதுடன்…

Read More

இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!!!

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு தனது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் உள்ளக கொங்கீரிட் பாதை திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் இன்று வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  மதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்!

நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 – 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில நடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது வீடுகளில் இருந்து பொருட்கள் ஆடியதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடுமையான வரட்சி காலநிலை காணப்படுகின்ற நிலைமையினால் இவ்வாறான நில நடுக்கம் உணரப்பட்டதாக அல்லது வேறு சம்பவங்களினால்…

Read More

பாரளுமன்ற உறுப்பினர் நவவி எம்.பி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி ஒன்றுகூடல் மற்றும் ஊர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கொற்றமுல்லை பகுதியில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஊர் முன்னேற்றம் மற்றும் அபிருத்திற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்வதற்கான பல முன்மொழிவுகள் ஆராய்ப்பட்டன. குறிப்பாக பாடசாலைக்கான மைதானம், சதொச விற்பனை நிலையம், பள்ளிவாசலுக்கான கட்டிடத்தை முழுமை படுத்துதல், தபால் நிலையம், 100…

Read More