அரசாங்கத்தின் இலத்திரனியல் அடையாள அட்டை மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தாது – ஜே.வி.பி
அரசாங்கத்தின் இலத்திரனியல் அடையாள அட்டை மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தாது என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த இலத்திரனியல் அடையாள அட்டையின் ஊடாக மக்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாக்கும் உரிமை முடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து அரசாங்கம் செய்யும் பிரச்சாரம் ஆச்சரியமளிக்கின்றது. எனினும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் அனுமதியளிப்பதில்லை….
