Headlines

ஹக்கீமின் கீழ் வரும் பள்ளிவாசல் காணியை ஏன் அவரால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது – றிஷாத்

எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வில்பத்துக் காணியில் அவர்களை குடியமர்த்த முற்பட்டபோது நான் காட்டை அழித்து மக்களை குடியமர்த்துகின்றேன் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நாட்டு ஜனாதிபதி கூட வில்பத்தில் அழிவு நடந்திருக்கின்றதென்கின்றார். ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ பயந்து நாம் அரசியல் செய்யவில்லை. எமது சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்றபோது தைரியமாக பேசுகின்ற சக்தியை இறைவன் எமக்குத் தந்திருக்கின்றான் அதுவரை மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…

Read More

கொழும்பு செல்லும் பிரதான வீதியில் நடைபெற்ற மீன் வர்த்தகம்!

பேலியகொடை மீன் சந்தை வர்த்தகர்கள் நேற்றைய தினம் (17) பிரதான வீதியின் ஒரு மருங்கில் மீன் விற்பனை செய்து வித்தியாசமான முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தனர். நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பேலியகொடை மீன் சந்தை முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்த தகவல்கள் அறியாத நிலையில் நேற்றுக் காலையும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மீன் லொறிகள் பேலியகொடை மீன் சந்தைக்கு வருகை தந்திருந்தன. இதனையடுத்து பேலியகொடைகொயிலிருந்து கொழும்பு வரும் பிரதான வீதியின்…

Read More

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை” – மஹ்ரூப் எம்.பி திட்டவட்டம்!

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார். ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் நாம் போராடி வருவதை திரிபுபடுத்தி, எமது கட்சி தமது கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் இரண்டறக் கலந்து…

Read More

மருந்துப் பொருள் விலை ஒழுங்குறுத்தும் முறை குறித்து அரசாங்கம் கவனம்

மருந்து விலையை ஒழுங்குறுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நியாய விலையில் மருந்துகளைப் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது பற்றி ஆராயும் விசேட பேச்சுவார்த்தை நேற்று (24) நுகர்வோர் அதிகாரசபையில் நடைபெற்றது.. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன, ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி அசித டி சில்வா ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Read More

மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், இன்று (03) ஞாயிற்றுக்கிழமை, தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரதான சந்தேகநபர்…

Read More

இன்று தேசிய அரசில் இணையும் அந்த ஆறுபேர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் (தற்போது தேசிய அரசில் அங்கம் வகிக்காதவார்கள்) தேசிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை இணைந்துகொள்ளவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த அறுவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த அறுவரும், இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. TM

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு வவுனியாவில்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு வாக்களித்த, வவுனியா மாவட்ட மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு, வவுனியாவில் இன்று  (22) நடைபெற்றது. குறித்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

சுதந்திரக் கட்சியில் இருந்து கருணா ராஜினாமா

முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

25இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

நக­ரங்கள், கிரா­மங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்­மா­ணிக்கும் பொறுப்­பி­னை தன்­னிடம் முன்­னெ­டுக்­கு­மாறு பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பணித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ வீட்டுப் பிரச்­சி­னை­களை கண்­டறிய ஒவ்­வொரு பிர­தேச மாவட்ட மட்­டத்தில் நட­மாடும் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேலும் தெரி­விக்­கையில், இலங்­கையில் நாளொன்­றுக்கு சுமார் 15 முதல் 20 இலட்சம் குடும்­பங்கள் நிரந்­தர வீடுகள் இல்­லாது பல்­வேறு துன்­பங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்­றன. இந்­தப் ­பா­ரிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான மிகப்­பெரும் பொறுப்பை…

Read More

குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு சீமந்து  மூட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

கஹடகஸ் திகிலிய மற்றும் மதவாச்சி பிரதேசத்தில்  வாழும்  குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் சீமந்து  மூட்டைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார மானியம் மூலம் அண்மையில்வழங்கி வைக்கப்பட்டன.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

பைசர், றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது

சுஐப் எம் காசிம் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை இன்று மாலை தற்காலிகமாக (08) இடை நிறுத்திக்கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று காலை (07) நடாத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்; போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர்களான றிஷாட்…

Read More

சீசன் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க குருநாகல் மாவட்ட மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நஸீர்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தாம் களமிறங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நஸீர் (MA) தெரிவித்தார். குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு கூட்டம் நேற்று (02) நுககஹகெதர நாரம்மலயில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் முஸ்லிம்களின் ஒற்றுமையினாலேயே குருநாகல் மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியும் கடந்த காலங்களைப் போன்று பிரிந்து செயற்படுவதனால் நமது சமூகத்தின் உரிமைகள் இழக்கப்பட்டு தொடர்ந்தும்…

Read More