சுகாதார வாரமும் இரத்ததான முகாமும் 2014
“இரத்தம் வழங்கி உயிரைப் பாதுகாத்தல்” (Give Blood Save Life) என்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோஷமாக மட்டுமன்றி, அதனை ஒட்டியதாக இரத்ததானம் எனும் உயிர்காக்கும் செயற்றிட்டம் உலகெங்கும் அரசாங்கங்களாலும் நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றது. ஜூன் 14ஆம் திகதி சர்வதேச இரத்தான தினம் பிரகடனப்படுத்தப்பட்டு இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை அனர்த்தங்கள், போர்ச்சூழல், விபத்துக்கள், குருதி தொடர்பான நோய்கள் முதலானவை இரத்த தானத்தை அதிகம் வேண்டி நிற்கும் சந்தர்ப்பங்களாகும். இச்சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கானோரை சாவின்…
