Headlines

முள்ளியவளை நாவற்காடு கிராமத்திற்கும் மின்சார வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சர் ரிசாத்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட முள்ளியவளை நாவற்காடு கிராமத்திற்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சரிடம் குறித்த கிராம மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். புல வருடங்களாக தாம் இருளில் இருப்பதாகவும், இதுபற்றி பல அரசியல் பிரமுகர்களிடம் கூறியும் தமக்கு மின்சார…

Read More

“மு.காவை  எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” – அமீர் அலி

– அஹமட் இர்ஸாட் – அஹமட் இர்ஸாட்:-நீங்கள் முகம் கொடுக்க இருக்கின்ற தற்போதைய தேர்தலுடன் கடந்தகால தேர்தல்களை ஒப்பிடுகின்ற பொழுது உங்களுக்குகான ஆதரவு கல்குடா தொகுதியில் அதிகரித்து வருக்கின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது இதற்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? அமீர் அலி:- மட்டக்களப்பில் இம்முறை களமிறக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரைக் கூட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போரளியாக காண முடியாது. அதனால்தான் இம்மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வீழ்ச்சி ஆரம்பமாகியிருக்கின்றது. அதனோடு சேர்த்து கல்குடாவின் பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்யும்…

Read More

பழுதடைந்த பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் சன்மான

பொருட்களை பதுக்கி வைப்போர், பழுதடைந்த, தரம் குறைந்த, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு நிதிச் சன்மானங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் பாதிக்கப்படுவதனை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக…

Read More

கைத்தொழில் அபிவிருத்தி மாநாடு

ஊடகப் பிரிவு ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்த கைத்தொழில் அபிவிருத்தி மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத்  பதியுதீன் மற்றும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகநாயகம் லி-யோங் ஆகியோர்  சந்தித்து கைகுலுக்குவதை படத்தில் காணலாம். (NOV 5)

Read More

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிலையான சூழலை உருவாக்குவதற்கான இரண்டாவது வரைவு அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு!

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கி, அவற்றை பெரிய அளவிலான நிலையான வணிக நிறுவனங்களாக மாற்றி,   ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்குகாக 3.2 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொழில் முயற்சி ஆய்வினை நடாத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக நிதி ஆதரவுகளை விரிவுபடுத்தியதற்காக, ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிறிய மற்றும் நடுத்தர…

Read More

தொலைபேசிக் கட்டணங்கள், திடீரென உயர்வு

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது. சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு…

Read More

நவவி எம் பி யின் நிதி ஒதுக்கீட்டில் தில்லையாடி ரத்மல்யாய அகதியா பாடசாலைக்கு புதிய கட்டிடம்.

தில்லையடி றத்மல்யாய அஹதிய்யா பாடசாலைக்கு பெறுமதிமிக்க கட்டிடம் ஒன்றை தனது நிதி ஒதுக்கீட்டில் வழங்கிவைத்த பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கடந்த வாரம் அதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்ட போது…

Read More

மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் நகரில் மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பில், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க தலைமையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 15 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புடன் கூடிய வணிக வளாகக் கட்டடத் தொகுதியை  அமைப்பதற்க்கான இந்தக் கலந்துரையாடலில், குருநாகல் மாநகர பிதா துஷார சன்ஜீவ, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன், மாகாண முதலமைச்சின் செயலாளர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் அரச நிருவனங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர்…

Read More

ஜப்பான் மீதான ஈடுபாட்டை ஐ.தே.க வரவேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த கருத்தை சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். பொருளாதார நிபுணராக விளங்கும் ஹர்ச டி சில்வா, ஜப்பானின் இலங்கைக்கான முதலீடுகள் யாவும் சிறப்பான பயன்களை தருபவையாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். இலங்கை சீனாவிடம் பெற்ற கடன்களுக்காக 6.5 வீத வட்டியை செலுத்த வேண்டியுள்ளது. எனினும் ஜப்பானின் முதலீடுகளை பொறுத்தவரையில், அது இலங்கைக்கு நிதியுதவியின் அடிப்படையிலேயே முதலீடுகளை மேற்கொள்வதாக ஹர்ச தெரிவித்துள்ளார். ஜப்பான் நீண்டகாலமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு…

Read More

நல்லாட்சி அரசின் 1000 குளங்கள் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வாழைச்சேனை கள்ளிச்சை குளம் புனரமைப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி!!!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய விவசாய அமைச்சின் வழிகாட்டலில் நாட்டில் ஆயிரம் குளங்கள் புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குளங்கள் புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டம்  நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவின் கீழ் உள்ள கள்ளிச்சை குளத்தினை புணரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. வாழைச்சேனை கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும்…

Read More

ஆஸி. சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை

– ஜே.ராஜன் – இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷெப், தெரிவிக்கையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவம்  தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கையிலுள்ள  ஏனைய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு இலங்கை சுற்றுலா அமைச்சினூடாக…

Read More

ஹமாஸுக்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை

ஐக்கிய அரசு தொடர வேண்டு மானால் ஹமாஸ் அமைப்பு காசாவில் தனது செயற்பாடுகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவை ஆளும் 27 பிரதி அமைச்சர்கள் கொண்ட நிழல் அரசு குறித்து அதிருப்தி வெளியிட்ட அப்பாஸ் அங்கு ஒரு அரசுதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இஸ்ரேல் முன்னெடுத்த 50 நாள் தாக்குதலில் இருந்து காசா மீண்டு வருகிறது. இந்த மோதலில் 2,100க்கும் அதிகமான பலஸ்தீனர் கொல்லப் பட்டதோடு…

Read More