Headlines

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் அரசும்: அதனை எதிர்க்கும் முஸ்லிம்களின் ஊர்வலமும்

04.11.2016  நேற்று (03.11.2016) கொழும்பில் இடம்பெற்ற தவ்ஹீத் ஜமாத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்காதே” என்ற போராட்ட  ஊர்வலம் முஸ்லிம் சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையும் கோஷமும் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களாலும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். இதனை ஏற்பாடு செய்தவர்கள் யாரென்பதை விடுத்து,  இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளாக அமைந்த “முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடாதே” என்ற விடயமே இங்கு நோக்கத் தக்கதாகும். எமது முஸ்லிம் தனியார் சட்டத்தில்,  விசேடமாக…

Read More

ஜனாதிபதியின் விஷேட உரை

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு கோட்டைப்பகுதியிலும் படையினரின் நடவடிக்கைகளுக்காக காணிகள், கட்டடங்கள் கையடகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இன்று அவை திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. எனவே இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வண்ணம் சில அரசியல்வாதிகள், விடுதலைப்புலிகள் குறித்த கருத்துக்கள் உட்பட்ட பொய்களை ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளும் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். சிங்கள மக்களை…

Read More

ACMC புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருகிறது

இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருவதாகவும்,சகல சமூகங்களின் உரிமைகள் எவ்வித அப்பழுக்கற்ற முறையில் அனுபவிப்பதற்கு தேவைாயன அடித்தளத்தினை இட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணயின் முதன்மை வேட்பாளரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக வரவுள்ளார் என்றும் கூறினார். வவுனியா மதவாச்சி வீதியில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு…

Read More

சிக்கிய ஆயுதங்கள் யாருடையது?

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக்களஞ்சியத்தை பொலிஸார் திறந்துள்ளனர். அங்கு மறைத்துவைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மாநாட்டு மண்டப வளாகத்தில் ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான 23 கொள்கலன்கள் காணப்படுகின்றது. இதில் அதி நவீன ஆயுதங்கள் காணப்படுகிறது. எனவே இந்த ஆயுதங்கள் எதற்காக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…

Read More

பொதுபல சேனா – விராது தேரரை விமர்சித்த இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

பிரசித்தமான மியன்மார் இணையத்தளம் ஒன்று நேற்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இராவட்டி என்ற இந்த இணையத்தளம் பிரசுரித்திருந்த தலைப்புக் காரணமாகவே அதன்மீது ஊடுருவல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த இணையத்தளத்தில் இலங்கைக்கு சென்றிருந்த பௌத்த பிக்குவான விராது தேரரும் இலங்கையின் பொதுபல சேனாவும் சந்திப்பு நடத்திய செய்தியில் இனவாதம் என்ற தலைப்பு இடப்பட்டிருந்தது. இந்தநிலையில் இராவட்டி இணையத்தளம் முஸ்லிம்களுக்கு சார்பானது என்றும், அது முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதாகவும் ஊடுருவலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Read More

பணிமனையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு

சம்மாந்துறை, பணிமனையில் இடம் பெற்றபொது மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும், லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி S.M.M.இஸ்மாயில் அவர்கள் பொதுமக்களுடனான கலந்துரையாடலின்போது பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்தார். இதன் அடிப்படையில் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்ளுக்கு. அவர்களது தொழில் துறையினைக்கு ஏற்றவகையில் அவர்களது தொழில் துறையினை முன்னேற்றும் நோக்கில் எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவுவதாகவும் கூறி இருந்தார். இதன் அடிப்படையில் அங்கு சமூகமளித்த முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள் யாவரும்…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 5ம் திகதிவரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை!

Mohamed Ali துபாய் மாப்பிள்ளை ,படித்தவர் பெண் கேடகிறாகள் -தாய் நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் திருமணத்தை நடத்தி விடு பணம் அனுப்புகின்றேன் – தந்தை இன்னும் பத்து நாட்களில் திருமணம் வைத்தாக வேண்டுமாம் .மாப்பிள்ளைக்கு இரண்டு மாதம்தான் விடுமுறையாம் – தாய் நல்லது திருமணத்தை நன்றாக ,சிறப்பாக செய் .ஆனால் நான் திருமணதிற்கு வர விடுமுறை கிடைக்காது .-ஸவூதியில் வேலை செய்யும் தந்தை திருமணம் சிறப்பாக முடிந்தது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் கூட…

Read More

அமைச்சர் மைத்திரியை காணவில்லை?

–  காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்- சு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது ஊர்ஜிதமாகவுள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில் அவரது பாதுகாப்;பை கருத்திற் கொண்டு – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று (21)காலை 10.30 மணிக்கு அமைச்சர் பைத்திரிபால சிறிசேன பங்குபற்றவிருந்த ஊடகவியலாளர் மாநாடு இந்த நிமிடம் வரை ஆரம்பமாகவில்லை என தெரியவருகின்றது. ஊடகவியலாளர் மாநாடு 10.30 மணிக்கு இடம்பெறும் என…

Read More

அர் – றஹ்மா நலன்புரி சங்கத்தினால், சீருடை வழங்கும் நிகழ்வு

– மௌலவி முஹம்மட் றிஸ்வி (அல்-அஷ்ஹரி) – பொலன்னறுவை மாவட்டத்தில் கதுருவெல குசும்கம எனும் பிரதேசத்தில் பொது நோக்காக சுமார் 2 மாதமாக தமது பொதுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள அர்-றஹ்மா நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள மற்றுமொரு செயற்பாடாக தமது ஊரிலுள்ள இளம் மாணவ மாணவிகளுக்கு அடிப்படையான மார்க்க கல்வியை கற்றுக்கொடுக்கும் குர்ஆன் (மக்தப்) மதரசாவிற்கான அனைத்து குறைகளையும் தங்களால் முடியுமான வரை நிறைவு செய்து இலவசமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பிள்ளைகளுக்கு சீருடை வழங்கும்…

Read More

அம்பன்பொல லங்கா சதொச திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு-  குருநாகல் அம்பன்பொல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க,  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.        

Read More

யோசித்தவின் மீளாய்வு மனு பரிசீலணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு எதிர்வரும் 29ம் திகதி பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More