Headlines

பொதுமக்களை சிறைப்பிடித்த தீவிரவாதிகள் ; மஹிந்த கவலை

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் 20 பொது மக்களை ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் சிறைபிடித்து வைத்துள்ள சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்குமென அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

தேர்தலுக்கு பின்னர் ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேறலாம்; மைத்திரிபால சிறிசேன

மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் எமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட மாட்டாது. இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு முன்னைய ராஜபக்ச ரெஜிமண்டுக்கு உள்ளது. தோல்வியின்…

Read More

எனது ஆதரவு பொது வேட்பாளருக்கே: சியாம்டீன்

இக்பால் அலி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தான் ஆதரிப்பதாக கண்டி மாவட்ட, சமூக அபிவிருத்தி மற்றும் இன நல்லிணக்கத்துக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.சியாம்டீன் தெரிவித்தார். எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்கினேன்: ஜனாதிபதி

எம்.ஆர்.சாரா பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தது மட்டுமன்றி மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தைப் போக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் கெண்டுசெல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கெலிஓயா நகரில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய சந்தர்ப்பத்தில் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்புக் கிடைத்தது. இப்பங்கரவாதத்தினால் சகல…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 6ஆவது நிபுணர் நியமனம்

சந்துன் ஜயசேகர காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவுக்கு, மற்றுமொரு சர்வதேச நிபுணரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். முன்னாள் சர்வதேச நீதிபதியும் ஜப்பானைச் சேர்ந்தவருமான மொடூ நோகுச்சி என்பவரே ஆறாவது நிபுணராக நியமிக்கப்பட்டவர் ஆவார். குறித்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேலைத்தேய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து இதுவரை 6 நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்மென்ட் டி சில்வா,…

Read More

தவம் கட்சியினைக் காட்டிக் கொடுத்தாரா..? காட்டிக் கொடுத்ததாக கூறியவர் காட்டிக் கொடுத்தாரா..?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறிய நல்ல கருத்துக்கள் பலவற்றை திரிவு படுத்தி கற்சிதமாய் மக்களிடம் சேர்க்கும் பணியில் சிலர் அண்மைக் காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதன் பின்னணியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளதாகவும் அறிய முடிகிறது.அண்மையில் தாருஸ் சலாமில் நடந்த கட்சிக் கூட்டத்தின் போது தவம் அரசிற்கு சார்பாக குரல் கொடுத்ததாக ஒரு குறித்த ஊடகவியலாளர் அண்மையில் கூறி இருந்தார். “இது ஓர் திரிவு படுத்தப் பட்ட செய்தி” என …

Read More

புதிய ஆலோசகர் நியமிப்பு

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க மற்றுமொரு வெளிநாட்டுநிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த விசேட நிபுணரான மோதோ நபூச் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

Read More

புதிதாக 10 விமானங்கள் கொள்வனவு

புதிதாக 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்கள் பிரிவிற்கு வலுச்சேர்க்கும் நோக்கிலேயே இந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவீந்திர ருபேரு குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கென தற்போது 23 விமானங்கள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Read More

தோல்வியுற்றால் விலகிவிடுவேன் ; மஹிந்த

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றால் எந்தத்த தயக்கமும் இன்றி அதிகாரத்தை ஒப்படைத்துவிடுவேன் என்று ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ச கத்தோலிக்கத் திருச்சபைக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் , வன்முறைகளற்ற தேர்தல் இடம்பெறும் என்று தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாககக் கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Read More

அரசிலிருந்து கூட்டிலிருந்து வெளியேறும் மு.கா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மகிந்த அரசிலிருந்து வெளியேறும் முஸ்லிம் காங்கிரஸ் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது எனவும் அறியமுடிகிறது(ou)

Read More

இரு சீறுநீரங்களும் பாதிக்கப்பட்ட சகோதரி அவசர உதவியை நாடுகிறார்

சாயந்தமருது -17 குத்தூஸ் வைத்திய வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய எஸ். ஏ. நளீறா என்ற பெண்மணி இரு சீறுநீரங்களும் பாதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல் நிலை பாதிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அவசரமாக தனியார் வைத்தியசாலையில் சிறுநீராக மாற்று அறுவைச் சிகிச்சை  செய்யுமாறு வைத்தியஅதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே இதன் பிரகாரம் வைத்திய செலவுக்காக 35 இலட்சம் ரூபா செலவு தேவை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வறிய குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி…

Read More

ரவூப் ஹக்கீமுக்கு, லக்ஷ்மன் கிரியல்ல பகிரங்க சவால்..!

அஷ்ரப் ஏ சமத் இலங்கையில் இருநூற்று ஐம்பது பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஐ நா சபைக்கு முறைப்பாடு அனுப்பிய நீதி அமைச்சர் ஹக்கீம் பள்ளிகள் உடைக்கப்பட்டதற்காக இலங்கையில் என்ன நீதியை நிலைநாட்டியுள்ளார் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார். கண்டி மஹியாவ பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட  கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல, ராஜபக்ஷ குடும்பத்துக்கு அதரவு வழங்குவதை  ஞாயம் கற்பிக்க கடந்த வாரம் அலறி மாளிகையில்…

Read More