Headlines

ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னையில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்ப்பானங்களையும், இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கை பானங்களையும், குளிர்ச்சியான உணவுகளையும் தேடி செல்கிறோம். அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 850க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக்  கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின்…

Read More

கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் முன் இதை ஒரு நிமிடம் படிங்க!

கூல் ட்ரிங்க்ஸ் அல்லது சாஃப்ட் ட்ரிங்க்ஸ் என கூறப்படும் சோடா கலப்பு அதிகமாக இருக்கும் பானங்களை விரும்பி பருகாதவர் யாருமில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று தெரியாது நாம் இதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். கூல் ட்ரிங்க்ஸில் கலக்கப்படும் நச்சுக்களின் தன்மையும், அது நாம் வீடு துடைக்க உபயோகப்படுத்தும் இரசாயனதிற்கு ஈடாக இருப்பதையும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நாம் கண்முன்னே நிகழ்ந்த உண்மை. ஆயினும் நாம் அதை மறந்து செயல்பட்டு வருகிறோம். கோடைக்காலம் தொடங்க…

Read More

காலையில் செய்யக்கூடாத 8 விஷயங்கள் !! கண்டிப்பாக படியுங்க பயனுள்ளாதாக இருக்கும் !!

1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 2. பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது…

Read More

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

உடலில் இரத்தத்தைத் சுத்தப்படுத்தும் ஒரு முக்கிய உறுப்பு தான் சிறுநீரகம். இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அளவுக்கு அதிகமான தண்ணீரை பிரித்துத்தெடுத்து, சிறுநீர்பைக்கு அனுப்பிவிடுகிறது. இதற்கு சிறுநீரகம் நன்கு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் டாக்ஸின்கள் சேர்வதுடன், சிறுநீரக கற்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கவும் ஒருசில உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். இங்கு சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்…

Read More

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்!!!

மாம்பழம்: பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். சப்போட்டா: இந்த பழத்தில் GI குறியீட்டு எண் 55 க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. அன்னாசி: இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க…

Read More

வீட்டில் கிடக்கும் பொருட்களை பயனுள்ள மருந்தாக மாற்றுவது எப்படி..?

உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. தலைவலி 1. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 2. விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி எடுத்து விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும். 3. தலைவலி, மூக்கடைப்பு நீங்க நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு…

Read More

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்!

பலம் தரும் மாம்பழம்! முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இந்தியப் பழங்களின் அரசன் என்ற சிறப்பும் பெற்றது மாம்பழம். ஒருபுறம், பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய யூனியனானது இந்தியாவின் அல்போன்சா மாம்பழத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மற்றொருபுறம், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுவருகின்றன. இதனால், மாம்பழத்தின் மீதான ஒருவித அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ‘பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அள்ளித்தரக்கூடிய சுவையான மாம்பழத்தை, பயத்தின் காரணமாக ஒதுக்கித் தள்ளக்…

Read More

நபி மருத்துவம் – ஜவ்வரிசி!

இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக “ஜவ்” என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள். பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி…

Read More

வெயிலுக்கு மோர்தான் பெஸ்ட்! வெப்பம் தணிக்கும் மோர் சிறந்த பிணி நீக்கி எத்தனை பேருக்கு தெரியும்..!

தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி. எத்தனைதான் வண்ணவண்ணமான குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், செரிமானம் சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு குவளை பருக அரைமணி…

Read More

அசைவப்பிரியர்களே…. இது உங்களுக்கான டிப்ஸ்!

அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. ஒமேகா 3 உள்ள உணவுகள் ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது. இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ்…

Read More

A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்!li

‘ராத்திரி முழுக்க‌ ஒரே புழுக்கம்… தாங்கவும் முடியல… தூங்கவும் முடியல… எவ்வளவு செலவானாலும் புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’ இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்! ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத் தின் தேவையில் அலுவலகங்கள் குளிர் சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக் கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது. இங்குதா ன் பிரச்னையே ஆரம்பம்….

Read More

புகைப்பிடிப்பதை விட சென்ட் அடித்துகொள்வதே உடலுக்கு கேடு விளைவிக்கும்! அதிர்ச்சி தகவல்

வாசனைகளுக்கு பழகிவிட்டது நவீன மூக்கு. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி இரவு இமை மூடும் வரை நம்மை சுற்றி வாசனையாக இருப்பதை போல பார்த்துக் கொள்கிறோம். முன்பெல்லாம் பெட்ரூமுக்கு மட்டும்தான் ரூம் ஃப்ரெஷ்னர். இப்போது காரில்கூட ஃப்ரெஷ்னர் அடித்துவிட்டுதான் வண்டியை ஸ்டார்ட் செய்கிறோம். டூத்பேஸ்டில் தொடங்கி, இரவில் வாய் கொப்பளிக்கும் மவுத்வாஷ் வரை ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து மணி நேரமாவது வாசனையாக இருக்கிறோம். சில பேருக்கு தூக்கத்தில்கூட ஏதோ வாசனையை நுகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்….

Read More