சட்டியோடு புலால் நாற்றம் போய்விட்ட கதைதான் இன்று முஸ்லிம் காங்கிரசின் நிலையும் – அமீர் அலி
-சுஐப் எம் காசிம் – முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருவதனால் சமூக உரிமைகளை மறந்து வாளாவிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் அமீர் அலி குற்றஞ்சாட்டினார். தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில் இடம்பெற்ற மக்கள் காங்கிரசின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி உரையாற்றினார். கட்சியின் தலைவர், அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கூட்டத்தில்…
