ACMC News
“தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர், தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் வேண்டுகோள்!
தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட்ட பல்துறை…
‘ரியாஜ் பதியுதீனின் கைது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்’ – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப் கண்டனம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தி, பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கவலை தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழலில், இவ்வாறான கைதுகளால் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen!
Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen… My Brother Mr. Riyaj Bathiudeen was arrested by the Criminal Investigation Department while he was at his house in Puttalam on 14.04.2020 stating that he had connection with a suicide bomber with respect to Easter Sunday Attacks. Until now none of…
“சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
‘எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக் கைது செய்து, ஊடகங்கள் வாயிலாக அதனைத் தெரியப்படுத்தினர். எனது சகோதரரர் அநீதியாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும், பழிவாங்கலுக்கு எதிராகவும் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகின்றோம்’ என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,…
‘புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண அகதிகளின் விடயத்தில் கரிசனை செலுத்துங்கள்’ – பசிலிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!
புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதனால், இந்தக் குடும்பங்கள் வாழ்வாதார வசதிகளின்றி இருக்கின்றனர். இதுவரை இவர்களுக்கான எந்தவொரு நிவாரணமோ உதவிகளோ கிடைக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மக்களுக்கு மன்னாரிலும் வாழ்வாதாரங்கள் கிடைக்கப்…
புல்மோட்டை பிரதேச மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டு, புல்மோட்டை பிரதேசத்தில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் குடும்பங்களுக்கு மற்றும் ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் நேற்று (07) வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்றூப், கிண்ணியாவைச் சேர்ந்த அஷ்ஷேய்ஹு அஸீஸ் (நளீமி) அவர்கள் தனது நண்பர் ஜிப்ரி ஹாஜியாரிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள் மூலம், கட்சியின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…
கொவிட் -19 நிவாரண நிதியத்துக்கான பங்களிப்பு!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொரோனா (Covid -19) நிவாரண நிதியத்துக்கான தனது பங்களிப்பை கடந்த மாதமுதல் நாட்டில் பல்வேறு பிரதேசங்களுக்கு செய்திருந்தார். அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தின் உலமா சபை மற்றும் அதனோடிணைந்த அமைப்புக்களுக்கும் கொரோனா நிவாரண நிதியத்துக்கான தனது பங்களிப்பைச் செய்திருந்ததுடன், தம்மால் இயன்றளவு பல உலருணவுப் பொதிகளையும் நிவாரணங்களையும் வழங்கியிருந்தார். தற்போதைய இக்கட்டான நிலையில் இவ்விடயங்களை பகிரங்கப்படுத்த கூடாது என முடிவு செய்திருந்தோம். எனினும், சமூக…
“மின்சாரம், குடிநீர் கட்டணங்களை இரத்துச்செய்யுங்கள்” – ஜனாதிபதி, பிரதமரிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மக்களின் பளுவைக் குறைக்கும் வகையில், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை, 2020 மார்ச் மாதம் தொடக்கம் எதிர்வரும் 06 மாதங்களுக்கு அறவிடாது இருக்கும் வகையில், அதனை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக, எமது நட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும், சவால்களையும்…
“நீர், மின்சார கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப் வேண்டுகோள்!
நீர், மின்சார துண்டிப்பை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமெனவும் என்றும் கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொரோணா தொடர்பான விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அன்றாடத் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உரிய காலப்பகுதியில் செலுத்தமுடியாத நிலையில் உள்ளனர். இக்காலப்பகுதியை மக்கள் வீட்டிலேயே கழிப்பதால் அதிக நீர்ப்பாவனை, மின்சார பாவனை காரணமாக…
தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் மன்னாரில் கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரின் தலைமையில், கொரோணா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மன்னாரில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டன. கொரோணா வைரஸின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில், ரமணன் (Technical Officer ) தலைமையில், தவிசாளர் முஜாஹிரின் பங்களிப்பில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களிலும், சன நெரிசல் மிக்க பகுதிகளிலும் கொரோணா வைரஸின் தாக்கம்…
“ஆட்கொல்லி கொரோணாவை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்” – முன்னாள் எம்.பி இஷாக் ரஹுமான்!
இலங்கையர் என்ற ரீதியில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஆட்கொல்லி கொரோணா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். கொவிட் – 19 வைரஸ் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தால் கொரோணா வைரஸை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் மாத்திரம் இந்த நோயை முற்றாக அழித்து விட முடியாது. நாட்டு மக்களும் இதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்….
“நாளாந்தக் கூலித்தொழிலாளருக்கு நிவாரணம் வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்” – கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் கோரிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணாமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சித் தலைவர் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை (24) அலரிமாளிகையில், கொரோணா அனர்த்தம் தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற…
